RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்க உள்ள நிலையில், 
உரையை வாசிக்காமல் ஆளுநர் புறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் ரவி மற்றும் எல் எல் ஏக்கள் என அனைவரும் சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர். 

முதல்வர் மற்றும் ஆளுநருக்கு மரியாதை அளிக்கப்பட்டு அனைவரும் சட்டமன்றத்திற்குள்ளே சென்ற நிலையில், கையில் பதாகைகள் ஏந்தி யார் அந்த சார் என அதிமுக வினர் முழக்கமிட்டதால் பரபரப்பானது. இதனையடுத்து ஆளுநர் ஆர் என் ரவி உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றார். 
சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியாக தேசிய கீதம் பாடப்படுவதும் மரபு. இந்நிலையில் க்
கடந்த ஆண்டும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறினார். அப்போது சபாநாயகரே ஆளுநர் உரையை முழுமையாக படித்தார்.  அதன்பிறகு முதலில் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என ஆளுநர் சபாநாயகருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார். அதற்கு மரபை மாற்றமுடியாது என சபாநாயகர் அப்போதே திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்நிலையில் அவையில் இந்த ஆண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஒலிக்க ஆளுநர் ரவி அவையில் இருந்து உரையை வாசிக்காமல் வெளியேறினார். இதனையடுத்து அவையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி ஆளுநர் மாளிகை தரப்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த பதிவை ஆளுநர் மாளிகை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் ஆர் என் ரவி ஆரம்பத்தில் இருந்தே தமிழக அரசுடன் உள்ள முரண்பாடு காரணமாக பல வகையில் குடைச்சல் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. 

ஆளுநர் உரையில் சில வார்த்தைகளை நீக்கி வாசிப்பது , உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்வது தொடர் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். இந்நிலையில் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டு ஆளுநர் உரை வாசிக்காமல் வெளியேறிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola