ABP News

RB Udhayakumar vs EPS : மேடையில் அசிங்கப்படுத்திய EPS!கோபத்தின் உச்சியில் RB உதயகுமார் சுக்குநூறாய் உடைந்த அதிமுக?

Continues below advertisement

இத்தனை நாட்களாக பக்கபலமாக இருந்த தன்னை பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தவுடன் மேடையிலேயே வைத்து எடப்பாடி பழனிச்சாமி அவமதித்தாக கருதி ஆர்பி உதயகுமார் ஈபிஎஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் புகைச்சலை கிளப்பியுள்ளது.  

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தார். அப்போது பாஜக அதிமுக கூட்டணி அறிவிப்பை ஈபிஎஸ் உடன் இணைந்து அறிவித்தார் அமித்ஷா. இந்த நிகழ்வின் போது அமித்ஷாவுடன் ஈபிஎஸ் உடன் எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி, ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் மேடையேறினர். ஆனால் போதிய இருக்கைகள் இல்லாததால் மேடையில் இருந்து ஆர்பி உதயகுமார் கீழே இறக்கிவிடப்பட்டார். இதன் காரணமாக ஈபிஎஸ் மீது ஆர்பி உதயகுமார் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆர்பி உதயகுமார் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் புறப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் அன்று மாலை செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு ஈபிஎஸ் இல்லத்தில் அமித்ஷாவிற்கு விருந்து நடைபெற்றது. அதிலும் ஆர்பி உதயகுமார் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது. கடந்த 2021 தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை மீதான அதிருப்தி காரணமாக அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது. அதன்பிறகு அண்ணாமலை ஈபிஎஸ் என இருவரும் மாறி மாறி பொதுவெளியில் விமர்சித்து வந்தனர். அப்போது ஈபிஎஸ் க்கு ஆதரவு குரல் கொடுத்த அதிமுகவினரில் ஆர்பி யின் பங்கு இன்றியமையாததது. இப்படி இருக்கையில் தற்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, தன்னையே ஈபிஎஸ் ஓரம்கட்டி விட்டதாக ஆர்பி கடும் கோபத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் ஆரம்பத்தில் இருந்தே ஈபிஎஸ் மீது சாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. குறிப்பாக முக்குளத்தோர் சமூகத்தினரை வேண்டுமென்றே அவர் ஒதுக்கிவருவதாகவும் பலர் குற்ரம்சாட்டியுள்ளனர். ஓபிஎஸ் சசிகலா தினகரனை தொடர்ந்து தற்போது ஆர்பி உதயகுமாரும் அதே சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் மேலும் மேடையில் ஈபிஎஸ் உடன் அமர்ந்திருந்த கேபி முனுசாமி, எஸ் பி வேலுமணி ஆகிய இருவருமே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இதே நிகழ்வின் போது இத்தனை நாட்களாக ஈபிஎஸின் ரைட் ஹேண்ட் போல் செயல்பட்டு வந்த ஜெயக்குமார் கலந்து கொள்ளாதது பேசுபொருளாகி உள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் ஜெயக்குமாருக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது மட்டுமில்லாமல் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஜெயக்குமார் மற்றும் ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட சீனியர்களை ஓரம்கட்டிவிட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் எழுந்துள்ளது அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola