PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்
’’ஏன் இருமொழிக்கொள்கையில் இவ்வளவு பிடிவாதம்’’ என கேள்வி எழுப்பிய கரண் தபாரை, ’’உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்? முதலில் உத்தர பிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு இரண்டு மொழிகள் நன்றாக தெரியும்? எங்களை விட சிறந்தவர்களை காட்ட முடியுமா? என பட்டுபட்டுனு பதிலளித்து தெறிக்கவிட்டுள்ளார் அமைச்சர் பிடிஆர்.
கரண் தபார் தொகுத்து வழங்கும் தனியார் ஊடக பேட்டி ஒன்றில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். அப்போது அவரிடம் தொகுதி மறுவரையறை, மும்மொழிக்கொள்கை என பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுத்து மாஸ் காட்டினார் பிடிஆர்.
’’ஏன் இருமொழிக்கொள்கையில் உங்கள் தமிழ்நாடு இவ்வளவு பிடிவாதமாக உள்ளது..மும்மொழிக்கொள்கையை ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறீர்கள்..குழந்தைகள் மொழிகளை எளிதிலும் கூடிய சீக்கிரமும் கற்றுக்கொள்ள கூடிய திறன் படைத்தவர்கள்.இது அவர்களுக்கு மேலும் நன்மை பயக்கும் தானே’’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பினார் கரன் தப்பார்..
அதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ’’ஓ..அப்படியா..உத்தர பிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்? பீகாரில் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்? முதலில் உத்தர பிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு இரண்டு மொழிகள் நன்றாக தெரியும்?
சரி நீங்கள் சொல்வது போல குழந்தைகள் மூன்று மொழிகள் கற்றுக்கொள்வது எளிது என்றால் அதன்மூலம் நமது நாடு கடந்த 75 ஆண்டுகளில் என்ன முன்னேற்றம் கண்டது..குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்வார்கள் என்பதற்கு என்ன சான்று உள்ளது..முதலில் அனைத்து குழந்தைகளும் இரு மொழிகளை தங்கு தடையின்றி கற்றிருக்கிறார்களா? அதன்பிறகு மூன்று மொழிகள் கற்றுக்கொள்வதை பற்றி பேசலாம்.
நாங்கள் எங்கள் தமிழ்நாட்டிற்கு இருமொழிக்கொள்கை தான் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இனம்,கலாச்சாரம் மற்றும் பொருளாதார ரீதியாக எடுத்த இந்த முடிவு எங்களுக்கு காலம்காலமாக நல்ல பலன்களை அளித்துள்ளது. இந்த நாட்டில் மும்மொழிக்கொள்கையை பின்பற்றும் எந்த மாநிலம் தமிழ்நாட்டை காட்டிலும் சிறந்து விளங்குகிறது என்பதை உங்களால் சொல்ல முடியுமா? நாங்கள் ஏன் மற்றவர்களுக்காக எங்கள் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்’’ என பேசி கரன் தப்பாரை வாயடைத்துப்போக வைத்துள்ளார் அமைச்சர் பிடிஆர்.