Mettur PMK Mla | ”என்னைய ஏன் கூப்பிடல! நான் சாகப்போறேன்”பாமக MLA வாக்குவாதம்

Continues below advertisement

நான் வர்றதுக்கு முன்னாடியே எப்படி தண்ணீய திறக்கலாம், என்னைய அவமானப்படுத்திட்டாங்க, மண்ணெண்ணெய எடுத்துட்டு வா என்று பாமக எம்.எல்.ஏ சதாசிவம் அதிகாரிகள் மீது  கோபித்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. 

கர்நாடகவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது, இதனையடுத்து அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டிய நிலையில் நீர்வளத் துறை அதிகாரிகள் 16 கண் மதகு பகுதியில் சிறப்பு பூஜை செய்து காவிரி அன்னையை மலர் தூவி வழிபட்டனர். அப்போது அங்கு வந்த மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம்  இந்த சிறப்பு பூஜை நடத்துவது தொடர்பாக தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், நீர்வளத்துறை அதிகாரிகள்  வேண்டுமென்றே தன்னை  புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து எம்எல்ஏ சதாசிவம்  பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பாமக நிர்வாகிகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.  அப்போது அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கூறி திடீரென தனது சட்டை பட்டன்களை கழட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சமாதானம் செய்ததை அடுத்து எம்.எல்.ஏ சதாசிவம் தனது கட்சி நிர்வாகிகளுடன் மேட்டூர் அணையின் 16 கண் மதகு பகுதியில் காவிரி அன்னைக்கு மரியாதை செய்ய புறப்பட்டார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram