Mayiladuthurai Police VS DMK | போலீஸுக்கே இந்த நிலையா?மிரட்டிய திமுகவினர்! வாக்குவாதம்.. பரபரப்பு..
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
போலீஸுக்கே இந்த நிலையா?மிரட்டிய திமுகவினர்! வாக்குவாதம்.. பரபரப்பு..
பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த காவல்துறை உதவி ஆய்வாளரை, திமுகவினர் சிலர் சூழ்ந்துக்கொண்டு கைகளால் தள்ளிவிட்டு தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
மயிலாடுதுறை மாவட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட மதிவதனி பேசிக் கொண்டிருந்தபோது அவ்வழியாக மயூரநாதர் ஆலய சுவாமி ஊர்வலம் சென்றது.
அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் கண்ணன், மதிவதனி பேசிய கருத்தால் எங்கே சர்ச்சை ஏற்பட்டுவிடுமோ என நினைத்த சிறிது நேரம் பேச்சை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார்.
இதனை கண்டு ஆத்திரமடைந்த திமுகவினர் காவல்துறை உதவி ஆய்வாளரை சுற்றி வளைத்து, கைகளால் தள்ளிவிட்டு தாக்க முயற்சி செய்தனர்.
இருபதுக்கும் மேற்பட்டோர் காவல் துறை உதவி ஆய்வாளரை தள்ளிவிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அருகில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் இச்சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
போலீஸுக்கே இந்த நிலையா?மிரட்டிய திமுகவினர்! வாக்குவாதம்.. பரபரப்பு..