Mamata Banerjee | ”தூக்குல போடுவேன்” அதிரடி காட்டும் மம்தா! சிக்கலில் திரிணாமுல்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தேவைப்பட்டால் குற்றவாளிகளை தூக்கில் போடுவேன் என அதிரடி காட்டியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவரான அவர் இரவு தாமதமாக உணவு சாப்பிட்டுவிட்டு மூன்றாவது மாடியில் உள்ள செமினார் ஹாலில் படிக்கச் சென்றார். மறுநாள் காலை அவர் இறந்த நிலையில் இருந்ததை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கொல்லப்படுவதற்கு முன்பு அவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது உடற்கூறாய்வில் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆளுங்கட்சிக்கு பெரும் நெருக்கடியாக மாறிய நிலையில், தேவைப்பட்டால் குற்றவாளிகளை தூக்கில் போடுவேன் என முதலமைச்சர் மம்தா அதிரடி காட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ‘பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தேன். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். நான் மரண தண்டனைக்கு ஆதரவானவன் அல்ல என்றாலும், தேவைப்பட்டால், குற்றவாளி தூக்கிலிடப்படுவார். அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றார்.