Savukku shankar latest news | சவுக்கு சங்கர் விடுதலை?சர்ப்ரைஸ் கொடுத்த நீதிபதி ரத்தானது குண்டாஸ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபெண் காவலர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதை எதிர்த்து அவரது தாயார் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்த நிலையில் சவுக்கு சங்கரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பிரபல யூடியுபரான சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை, கோயம்புத்தூர் காவல்நிலையங்களில் அவர் மீது மேலும் சில வழக்குகள் பதிவாகின. அடுத்தடுத்த புகார்களை தொடர்ந்து, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் அப்போதைய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.
பெண் போலீசாரை அவதூறாக பேசியதற்காக அவரை இதே குற்றச்சாட்டிற்காக அவர் மீது 16 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை எல்லாம் ஒன்றாக விசாரிக்கவும், ஒரு ஒரு வழக்கிற்கும் தன்னை ஊர் ஊராக அழைத்து செல்வதாகவும், மேலும் இந்த வழக்குகளுக்கு எல்லாம் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை அவர் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபது ஜி. ஜெயச்சந்திரன் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்குகள் எல்லாம் ஓரே குற்றத்திற்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளா என்று காவல்துறையினர் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அந்த 17 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சவுக்கு சங்கரின் தாயார் கமலா வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பான ஆட்கொணர்வு மனுவில், தனது மகன் சவுக்கு சங்கரை சட்டவிரோதமாக அடைத்து வைத்து இருப்பதாகவும், அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். விசாரணையின் போது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததான் காரணமாக, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததாக, காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதன் முடிவில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த நடவடிக்கையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வேறு வழக்கில் ஜாமின் பெற தேவையில்லை என்றால், சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.