ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜோதிமணி மற்றும் எம்பி ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி கடந்த 17ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் கோயில் நிலத்தில் உள்ள கண்ணம்மாள் என்பவரின் வீடு, 62 கடைகள், ஒரு செல்போன் டவர் ஆகியவற்றை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிட திட்டமிட்டு இருந்தனர்.இன்று கண்ணம்மாள் என்பவர் வீட்டிற்கு சீல் வைக்க சென்ற இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் இறங்கினர். இதனால் கட்சிக்காரர்களும் போராட்ட களத்தில் குவிந்தனர்.
பின்னர் அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிட மறுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஜோதிமணி மற்றும் விஜயபாஸ்கர் வாகனத்தில் இருந்து கொண்டே முழக்கங்களை எழுப்பினர். மேலும் பாதுகாப்பு பணிக்காக கரூர் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.