Jayakumar Slams Stalin | ”மெட்ரோ ரயிலில் கஞ்சா!விளம்பரம் தானா ஸ்டாலின்?”ஜெயக்குமார் ஆவேசம்!

Continues below advertisement

பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில்  போதை ஆசாமி கஞ்சா பயன்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து ஜெயக்குமார் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் தொர்ந்து கஞ்சா விற்பனை அரங்கேறிவருவதால் அதனை அடக்க முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவுகளை சமீபத்தில் பிறப்பித்தார். கடந்த 5 மாதத்தில் தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரில் 469 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், அவற்றில் ஈடுபட்ட 917 கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்ததோடு நின்றுவிடாமல் அவ்வழக்குகளை தொடந்து கண்காணித்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா போதை மற்றும் கஞ்சா விற்பனை சமூக சீர்கேட்டை சமூகத்திலிருந்து முற்றிலுமாக வேரறுக்க அனைத்து பொது மக்களின் மேலான ஒத்துழைப்பு அவசியம்” என தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுள்ளார். மேலும் கஞ்சாவிற்கு எதிரான இது போன்ற நடவடிக்கைகள் அதிரடி தொடரும் எனவும் தெரிவித்திருந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் போதை ஆசாமி கஞ்சா பயன்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து ஜெயக்குமார் ஸ்டாலினை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில், பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்.தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள்.கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா?. என்று ஜெயக்குமார் அந்த போதை ஆசாமியிம் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram