ABP News

Jagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோ

Continues below advertisement

கனிமவளக்கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் இறப்பிற்கு முன் ஜகுபர் அலி கடைசியாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சேர்ந்தவர் ஜகுபர் அலி. இவர் சமூக ஆர்வலரும் அதிமுக நிர்வாகியும் ஆவார்.இவர் திருமயம் பகுதியில் சட்டவிரோதமாக மலைகளை உடைத்து, இயற்கை வளங்களை சூறையாடுவதாக அரசு அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளார். மேலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் காரனமாக வலையன்வயலில் கல்குவாரி நடத்தி வரும் ராசு, ராமையா, அவர்களது நண்பர் முருகானந்தம் ஆகியோர் தங்களது லாரி ஓட்டுநரை வைத்து கடந்த 17 ஆம் தேதி ஜகுபர் அலியை லாரி ஏற்றி கொலை செய்துள்ளனர். சாலை விபத்தில் ஜகுபர் அலி மரணமடைந்தது போல பிம்பத்தை உருவாக்கினர். எனினும் ஜகுபர் அலியின் மனைவி தனது கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்த நிலையில், இந்த கொலை அம்பலமானது.

இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் ஒருவர், மாநில சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தொகுதியில் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram