Gayathri Raghuram slams Annamalai : ’’பைத்தியக்காரன்’’திட்டித் தீர்த்த காயத்ரிஅண்ணாமலைக்கு சவால்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என தான் கூறியதில் என்ன தவறு என அண்ணாமலை கூறியுள்ள நிலையில் இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் தன்னுடன் விவாதம் நடத்த தயாரா என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் அண்ணாமலைக்கு அதிமுக மகளிர் அணி துணை செயலாளரான காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களவை தேர்தலில் 6 ஆம் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்னதாக டெல்லியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அண்ணாமலை," தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை காட்டினார். அவர் மிகச்சிறந்த இந்துத்துவா வாதியாக இருந்தார். அதிமுக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து விலகிச் சென்று விட்டது.
இதனால் அதிமுக வாக்காளர்கள் பாஜக பக்கம் வந்துவிட்டார்கள். இதனால் பாஜக தமிழகத்தில் பெரிய இடத்தை பிடித்தது என பேசியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜனும் அண்ணாமலையின் கருத்து உண்மைதான் என பேசியிருந்தார் . இதைத்தொடர்ந்து அண்ணாமலையிடம் மீண்டும் ஜெயலலிதா குறித்து அவர் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஜெயலலிதாவை இந்துத்துவவாதி என தான் கூறியதில் என்ன தவறு. இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் தன்னுடன் விவாதம் நடத்த தயாரா என கேள்வி எழுப்பியிருந்தார்
இந்நிலையில் நடிகையும் அதிமுக மகளிர் அணி துணை செயலாளரான காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு ஒரே வரியில் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்ட எக்ஸ் பதிவில், ஒரு எல்கேஜி மாணவன் கூட இந்த முட்டாள் மனிதனுடன் விவாதம் செய்ய மாட்டான். ஒரு முட்டாள் மற்றும் பைத்தியக்காரனுடன் விவாதிப்பது நேரத்தை வீணடிக்கிறது போல." என கூறியுள்ளார் காயத்ரி ரகுராம். காயத்ரி ரகுராமின் இந்த பதிவை அதிமுகவினர் தற்போது வைரலாக்கி வருகின்றனர். அதே சமயம் பாஜகவினர் அவரின் பதிவின் கீழ் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.