Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

Continues below advertisement

முதலமைச்சரான பிறகு தான் மீண்டும் சட்டப்பேரவைக்கு வருவேன் என சபதம் போட்டு, சொன்னபடியே இன்று சட்டப்பேரவைக்கு எண்ட்ரி கொடுத்த சந்திரபாபு நாயுடுவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மந்திரங்கள் முழங்க முதலமைச்சர் அறைக்கு வந்த பிறகே சட்டப்பேரவைக்குள் சென்றார். 

ஆந்திர சட்டமன்ற தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து, நான்காவது முறையாக அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய ஆட்சி அமைந்தபிறகு, ஆந்திர மாநில சட்டமன்றம் முதன்முறையாக இன்று கூடியது. அதையொட்டி சட்டப்பேரவைக்கு வந்த சந்திரபாபு நாயுடுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டப்பேரவை வளாகத்தில் தரையில் படுத்து வணங்கினார். 

காரில் வந்து இறங்கியதும் பூரண கும்ப மரியாதை மற்றும் மந்திரங்கள் முழங்க முதலமைச்சர் அறைக்கு சென்றார் சந்திரபாபு நாயுடு. அதன்பிறகு அவர் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்ததும் மீண்டும் மந்திரங்கள் முழங்கப்பட்டது. பின்பு சட்டப்பேரவைக்குள் சென்ற சந்திரபாபுவுக்கு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். சபதத்தை நிறைவேற்றி மீண்டும் சட்டசபைக்குள் முதலமைச்சராக அடியெடுத்து வைத்த சந்திரபாபுவுக்கு தெலுங்கு தேசம் மற்றும் கூட்டணி கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram