Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒருவர் தனது வளர்ப்பு நாயை மூத்த குடிமக்கள் வாக்கிங் செல்லும் ஏரியாவில் சிறுநீர் கழிக்க வைத்ததால் ஏற்பட்ட தகறாரில், முதியவர்கள் சிலர் நபர் ஒருவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூர் வர்தூர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மூத்த குடிமக்கள் வாக்கிங் மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கென தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மூத்த குடிமக்கள் தினசரி அங்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் அதே குடியிருப்பில் வசிக்கும் மற்றொரு நபர் தனது வளர்ப்பு நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் வந்துள்ளார். அப்போது அந்த நாய் வாக்கிங் ஏரியாவிலேயே சிறுநீர் கழித்ததாக தெரிகிறது. இதனால் எரிச்சலடைந்த நபர் ஒருவர் நாயின் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதனை நாயின் உரிமையாளர் வீடியோவாக பதிவு செய்ய தொடங்கியதும் கடுப்பாகி அவரது செல்போனை தட்டிவிட்டார். இதில் ஆத்திரமடைந்த நாயின் உரிமையாளர் அந்த வயதான நபரை தாக்கினார். வாய் தகராறு கைக்கலப்பாக மாறிய நிலையில் அங்கிருந்த மூத்த குடிமக்கள் அனைவரும் ஒன்றுகூடி நாயின் உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்த பெண்மணி ஒருவர் இருதரப்பினரையும் விலக்கிவிட்டு பெரும் அசம்பாவிதம் நிகழாமல் தடுத்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது