
Armstrong Wife Porkodi: எரிமலையாய் வெடித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி ”என்ன தூக்க நீ யாரு?”
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் என்னை நீக்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கு.. என நீக்க ஆனந்தனுக்கு எந்த எந்த அதிகாரமுல் இல்ல என ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தெரிவித்துள்ளது சூட்டை கிளப்பியுள்ளது.
பகுஜன் சாமஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஆண்டு மார்மநபர்களால் அரிவாளால் சரமாரியக வெட்டி கொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் தலைநகரில் அவரின் வீட்டின் முன்னாலேயே ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கின் விசாரணை தற்போதும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
இதையடுத்து ஆம்ஸ்டாராங்கின் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது
ஆம்ஸ்ட்ராங் மனைவி கட்சியை கலந்து அலோசிக்காமல் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாக தலமை செயளாலரை சென்று சந்தித்தாக கூறப்படுகிறது.. இதுப்போன்று கட்சிக்குள் கலந்து ஆலோசிக்காமல் சில முடிவுகளை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது, அந்த கூட்டத்தில் பொற்கொடி தனது ஆதரவாளர்களை திரட்டி மாநில தலைவர் ஆனந்தன் தனக்கு எதிராக செயல்படுவதாகவும் காழ்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும் கட்சியின் மேலிட பிரதிநிதிகளிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த சம்பவ, பெரும் பரபப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்தநிலையில் பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து நீக்க ஆனந்தன், ஜெய்சங்கருக்கு எந்த அதிகாரம் இல்லை. சிபிஐ விசாரணை வேண்டும் என்பதில் ஏன் மாநில தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை? என் மீது அவதூறான செய்தியை திட்டமிட்டு பரப்புகிறார் ஆனந்தன் என்று ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தெரிவித்துள்ளார்.