Andhra Aadudam scam | ரோஜா கைதாகிறாரா?ஆடுதாம் ஆந்திராவில் மோசடி திணறும் YSR காங்கிரஸ் YSR Congress
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த நடிகை ரோஜா மீது ரூ 150 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், கடைசி 2 ஆண்டுகள் சுற்றுசூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் இருந்தவர் நடிகை ரோஜா. அப்போது ரோஜா நடத்திய 'ஆடுதாம் ஆந்திரா' என்ற பெயரில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தினார்.அந்த போட்டிகளை நடத்த அப்போது இருந்த ஜெகன் மோகன் அரசு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரி, ஆத்யா- பாத்யா அமைப்பினர் விஜயவாட சிஐடி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் தர்மன கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட சிலருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தனர்.போட்டிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்ததாக பல தரப்பினர் ஆந்திர சிஐடி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரோஜா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க ஆந்திர சிஐடி ஆந்திர சிஐடி போலீஸ் விஜயவாடா போலீஸ் ஆணையருக்கு பரிந்துரைத்துள்ளது. ரோஜா செல்வமணி மீது வழக்குப் பதிவு செய்யுமாறு ஆந்திர மாநில டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் நடிகையும் அரசியல் பிரமுகருமான நடிகை ரோஜா விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது