Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக இருந்தாலும் சில முக்கியமான முடிவுகளை அண்ணாமலையே எடுப்பதாக சொல்கின்றனர். தனக்கு வேண்டியவர்களுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று நயினார் ஒரு லிஸ்ட் போட்டாலும் டெல்லி பாஜக தலைமையிடம் தனக்கு இருக்கும் லாபியை வைத்து நயினாரை செயல்படவிடாமல் அண்ணாமலை முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்றிவிட்டு அதிமுகவுடன் நெருக்கமாக இருக்கும் ஒருவரை தமிழக பாஜக தலைவராக நியமித்தால் தான் சரியாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே நயினாருக்கு தலைவார் பொறுப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனாலும், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழலில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக நயினார் நாகேந்திரன் தீவிரமாக களம் இறங்கவில்லை என்று கூறப்படுகிறது. தான் தலைமையில் நடைபெறும் போராட்டங்களில் கூட அவர் மென்மையன போக்கையே கடைபிடிக்கிறாட் என்று பாஜக தொண்டர்களே முனுமுனுப்பதாக சொல்லப்படுகிறது.
இச்சூழலில் தான் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா மத்திய அமைச்சர் அமித்ஷாவை கடுமையாக தாக்கி பேசினார். ”எதிரிகள் வெவ்வேறு வடிவத்தில் வருவார்கள். மதுரைக்கு வந்த அமித்ஷா டெல்லியை பிடித்துவிட்டோம், ஹரியானாவை பிடித்துவிட்டோம், மராட்டியத்தை பிடித்துவிட்டோம் அடுத்து தமிழ்நாடு என கூறியுள்ளார். முட்டாள்.. டெல்லியில் பார்த்த கெஜ்ரிவால் தனிப்பட்ட தலைவன், ஹரியானாவில் ஒரு தனிமனிதனை தோற்கடித்தீர்கள். மராட்டியத்திலு ஒரு தனி மனிதனை. ஆனால் ஸ்டாலின் தனி மனிதன் இல்லை. இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கருணாநிதி என்ற தத்துவம் உள்ளது” என்று கூறினார்.
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு எதிராக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்திருந்தாலும் ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டம் நடத்த அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அண்ணமலை தான் அமித்ஷாவை தொடர்பு கொண்டு தமிழ் நாட்டில் இப்படி எல்லாம் நடக்கிறது ஒரு போராட்டம் ஒன்று நடத்த வேண்டும் என்று சொன்னதாக கூறப்படுகிறது. அதேபோல், தன்னை ஒருமையில் விமர்சனம் செய்தவர்களுக்கு எதிராய் போரட்டம் செய்ய கூட நயினார் தயங்குகிறாரா என்ற அமித்ஷாகடிந்து கொண்டதாக சொல்கின்றர். இதனல் பெயரிலேயே கடந்த ஜூலை 1 ஆம் தேதி பாஜகவினர் போராட்டம் நடத்தினார்களாம்.
அதேபோல், தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை தயரித்துக்கொண்டு அண்ணாமலையை பார்க்க நயினார் சென்றதாகவும், அண்ணே ஏற்கனவே இருக்கறவங்க எல்லாம் நான் பார்த்து பார்த்து போட்ட நிர்வாகிகள் தாண்ணே.. அத எதுக்குன்னே இப்ப மாத்திக்கிட்டு... என்று சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. டெல்லி பாஜக தலைமையிடம் தனக்கு இருக்கும் லாபியை வைத்து அண்ணாமலை தான் தமிழக பாஜக தலைவர் என்பதைப்போல் செயல்படுவதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.