A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MP
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுடியரசுத்தலைவர் உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அவையில் நடைப்பெற்று கொண்டு இருந்தது
அப்போது திமுக எம்.பி ஆ.ராசா சிறிது நேரம் மக்களைவையில் சிறிது நேரம் சபாநாயகராக செயல்பட்டார்.
திமுக எம்.பி ஆ.ராசா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தினார்.
மக்களவை விதிகளின்படி, சபாநாயகர் மக்களவை உறுப்பினர்களை வைத்து ஒரு குழுவை நியமிக்க வேண்டும். இந்த குழுவில் 10 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சபாநாயகரோ துணை சபாநாயகரோ இல்லாத பட்சத்தில் இந்த குழுவில் உள்ளவர்கள் அவையை வழிநடத்துவர். அந்தவகையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 9 பேரின் பெயரை அறிவித்தார். அதில் திமுக எம்.பி ஆ.ராசாவும் ஒருவர்.
அவரை தவிர்த்து பாஜகவில் இருந்து 4 பேரும், காங்கிரஸில் இருந்து ஒருவர், திரிணாமுல் காங்கிரஸில் இருந்து ஒருவர், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஒருவர், சமாஜ்வாடி கட்சியில் இருந்து ஒருவர் என மொத்தம் 9 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் திமுக எம்.பி ஆ.ராசா இன்று அவையை வழிநடத்தினார்.