Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
கடும் கோபத்தில் இருந்த மம்தா பானர்ஜி தனது கட்சி தொண்டரையே அறைந்த சம்பவம் அதிரவைத்துள்ளது. கூட்டத்தை கலைப்பதற்காக தொண்டர்களை மம்தா அடித்த காட்சிகள் வெளியாகி விமர்சனத்தில் சிக்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. குளத்தில் சாக்கு மூட்டையில் சிறுமி சடலமாக கிடைத்த நிலையில் சம்பந்தப்பட்ட நபரை ஊர் மக்கள் அடித்தே கொலை செய்தனர். இதில் பாஜக பிரமுகர் உள்ளிட்ட சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தை தடுப்பதற்காக பாஜகவினர் வேண்டுமென்றே தகராறு செய்ததாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இதனால் போராட்டத்தில் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமையை சமாளிக்க பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தினர்.
இதனை அறிந்த மம்தா பானர்ஜி அவரே கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது திரிணாமுல் கட்சி தொண்டர்களையே மம்தா பானர்ஜி அடித்தது கட்சியினரை அதிரவைத்தது. மம்தாவை யாரும் நெருங்க விடாமல் பாதுகாப்பு அரணாக நின்ற தொண்டரையே அறைந்த காட்சி வெளியாகி விவாதத்தில் சிக்கியுள்ளது.
சொந்த கட்சியினரையே மதிக்காமல் மம்தா பானர்ஜி ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாக பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.