Mamallapuram | பைப்பால் அடித்த பெண்கள்! ”No Parking-னு சொன்னது குத்தமா?”ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

Continues below advertisement

மாமல்லபுரம் ஐந்துரதம் வணிக வளாகத்தில் 'நோ என்டிரி'யில்  காரை parking செய்வதை தடுத்ததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் ஏய் யாரை பொறம்போக்கு என்கிறாய்' என ஆவேசமடைந்தனர். பின் சுற்றுலா வந்த 2 பெண்கள் தாதாவாக மாறி பார்க்கிங் செக்குரிட்டியை நடிகர் வடிவேலு பட பாணியில் நடுரோட்டில் சரமாரியாக அடித்து உதைத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறாது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில் மாமல்லபுரம் ஐந்துரதம் பிராதன சின்னம் அருகில் நோ பார்க்கிங் வழியாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் இருந்த கார் ஒன்று பார்க் செய்ய முயன்றது. அந்த காரை அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறும், நோ என்டிரி வழியாக கார் செல்லக்கூடாது என்றும் அங்கிருந்த செக்குரிட்டி ஏழுமலை என்பவர் அந்த காரை வழிமறித்து நின்றார். 

அப்போது அவரை இடிப்பதுபோன்று, அந்த கார் நோ எனட்ரியில் செல்ல முயன்றது. அப்போது காரில் வந்தவர்களை நோக்கி வாகன நிறுத்துமிட பணியாளர் ஏழுமலை ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. உடனே காரில் இருந்து இறங்கிய டிப-டாப் உடை அணிந்திருந்த 2 பெண்களும் ஏய் யாரை பார்த்து பொறம்போக்கு என்கிறாய் என ஆவேசமடைந்து, பத்திரகாளியாக மாறினார். அதில் ஒரு பெண் ரவுடி போல மாறி காரைவிட்டு திபுதிபுவென கீழே இறங்கினர். அவர்கள் ஆவேசமடைந்து நடுரோட்டிலேயே ஏழுமலையை சரமாரியாக அடித்து உதைத்தனர். உடன் வந்த 2 ஆண்களும் சேர்ந்து நடுரோட்டில் அந்த வாகன நிறத்துமிட செக்குரிட்டியை கடுமையாக தாக்கினர். பதிலுக்கு அவர் தாக்க முயற்சிக்கவே, 4 பேரும் கீழே தள்ளி கும்மாங்குத்து குத்தி அவரை நைய புடைத்தனர். அதில் ஒரு பெண் அவர்  வைத்திருந்த 2 அடி நீள பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி, அந்த பைப் உடையும் அளவுக்கு அவரை தாக்கி அவரது சட்டையை கிழித்தனர். மற்றொரு பெண் ஸ்டண்ட் மாஸ்டர் போல் காலால் எட்டி உதைத்து தாக்கினார். அடி-உதையில் அவர் வலியில் கதறினார். இந்த கைகலப்பு சம்பவத்தால் அந்த ஏரியாவே பரபரப்பானது. 

பிறகு அவ்வழியாக சென்றவர்கள் காரில் சுற்றுலா வந்த 4 பேரையும் சமாதானம் செய்தனர். பிறகு அவர்களிடம் அடி உதை வாங்கிய ஏழுமலையை அவர்களின் பிடியில் இருந்து காப்பாற்றி அங்கி போக செய்தனர். பிறகு 2 பெண்கள் உள்ளிட்ட 4 சுற்றுலா பயணிகளும் அவர்கள் வந்த காரில் அங்கிருந்து சென்று விட்டனர். சினிமாவில் வருவது போன்ற இச்சம்பவத்தை அந்த வழியாக சென்ற மற்றொரு சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram