Madurai Melur Girl Death: மேலூர் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமையா? எஸ்.பி விளக்கம்
ABP NADU
Updated at:
06 Mar 2022 05:25 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppMadurai Melur Girl Death: மதுரை மாவட்டம் மேலூர் அருகே 17 வயதுடைய இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற இளைஞனுடன் மாயமானதாக கூறப்பட்ட நிலையில் அவர் மாயமானதாகவும், கடத்தி செல்லப்பட்டதாக கூறி பெண்ணின் பெற்றோர் மேலூர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இந்தநிலையில் அப்பெண் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடையவே, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துநிலையில் இன்று அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.