Madurai Melur: வெகுவிமரிசையாக நடைபெற்ற மேலூர் மீன்பிடி திருவிழா
ABP NADU
Updated at:
09 Mar 2022 04:23 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppMadurai Melur: மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டியிலுள்ள கம்புளியான் கண்மாயி அமைந்துள்ளது. இந்த கண்மாயில் வருடந்தோறும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மீன்பிடி திருவிழாவில் சருகுவலையபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான வடக்குவலையபட்டி, தனியமங்கலம், கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இன்று அதிகாலையில் கண்மாயில் வந்து குவிந்தனர்.