மதுரைக் காரங்க பாசமே வேற ரகம்தான்...வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு

மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சக்திவேல். இவர் செல்லப்பிராணிகள் மீது அளவுக்கதிகமான அன்பு கொண்டவர் இதனையடுத்து தான் வளர்த்து வந்த  சுஜி என்ற பெண் நாய் கர்ப்பம் தரித்ததை அடுத்து தன் குடும்பத்தாருடன் இணைந்து நாய்க்கு வளைகாப்பு நடத்துவது என முடிவு செய்தார். அதன் அடிப்படையில்  தனது செல்லப் பிராணியான சுஜிக்கு ஐந்து வகையான உணவுகளை தயார் செய்து  மாலை அணிவித்து வளைகாப்பு நடத்தி முடித்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் செல்லப்பிராணியின் மீது காவல் உதவி ஆய்வாளா சக்திவேலுக்கு, வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola