Kerala Bus Fire Accident|ஊசலாடிய 35 உயிர்கள்!நடுரோட்டில் தீப்பற்றிய பேருந்துகேரள மக்கள் மாஸ் சம்பவம்

Continues below advertisement

கேரள மாநிலம் ஒற்றப்பாலம் பகுதியில் 35 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் ஒருவர் கூட செல்போனை எடுத்து வீடியோ எடுக்காமல் அனைவரையும் துரிதமாக காப்பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.

கேரள மாநிலம் ஒற்றப்பாலம் பகுதியில் சுமார் 35 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென எஞ்சினில் தீப்பற்றிய நிலையில் ஓடும் பேருந்து பற்றி எரியத் தொடங்கியது.  பேருந்தை நிறுத்தியும் பேருந்தின் முன்கதவு பழுது ஏற்பட்டு திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பயணிகள் வெளியேற முடியாமல் பதற்றமடைந்தனர். பின்னர் அருகில் இருந்த டெலிவரி ஊழியர் ஓடிவந்து கதவை உடைத்து பயணிகளை வெளியேற செய்தார். பின்னர் சாலையில் இருந்த நபர்கள் அருகில் கடையில் இருந்த நபர்கள் என அனைவரும் தீயணைப்பான் கருவிகளுடன் வந்து 45 விநாடிகளில் அனைத்து பயனிகளையும் பேருந்தை விட்டு வெளியேற்றியதோடு நெருப்பையும் அணைத்தனர். 

இந்த விபத்து குறித்த காட்சிகள் சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறது. விபத்து நடந்த இடத்தில் இருந்த ஒருவர் கூட கையில் செல்போனை எடுத்து வீடியோ எடுக்காமல், துரிதமாக செயல்பட்டு நிலைமையை சீராக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதைத்தொடர்ந்து இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்த கேரள எம்பி ஜான் பிரிட்டாஸ், யாரும் இந்து முஸ்லிம் பாகுபாடு பார்க்கவில்லை..கையில் செல்போனுடன் நிற்கவில்லை என இச்சம்பவம் குறித்து மனம் நெகிழ்ந்துள்ளார்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola