Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது விமர்சனத்தில் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி மல்லிகார்ஜூன கார்கே. அவரது பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. பாஜகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினரும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவையை உடனடியாக ஒத்திவைத்தார்.
பேச வாய்ப்பளித்த மாநிலங்களவை தலைவருக்கு நன்றி
உடனே எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட பாஜகவினர்
நேற்று ஒரு மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது
அந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தில் நீட் வினாத்தாள் கசிவு பற்றி குரல் எழுப்பிய நமது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது
அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன
அவர்களை போலீசார் கடுமையாக அடித்திருக்கிறார்கள்
இன்று மாணவர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்
உடனே அவையை கலைத்த மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
“ஏய் உட்காரு” என கத்திய காங்கிரஸ் கட்சியினரை கண்டித்த சோனியா காந்தி