Kolkata doctor case : ”செமினார் ஹால் SECRET” பல்டி அடித்த குற்றவாளி! டாக்டர் கொலையில் ட்விஸ்ட்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநான் செமினார் ஹாலுக்குள் போகும் போதே பெண் மருத்துவர் இறந்துதான் கிடந்தார் என பகீர் தகவலை சொல்லியுள்ளார் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சஞ்சய் ராய்.
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையிலேயே உள்ள செமினார் ஹாலில் வைத்து அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையில் இறங்கிய போலீசார் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். மேற்கு வங்க போலீசாருக்கு உதவும் வகையில் Civic volunteer ஆக இருந்த அவர், இரவு நேரத்தில் மதுபோதையில் மருத்துவமனைக்குள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த ப்ளூடூத்தை வைத்து சிக்கினார் சஞ்சய் ராய். அவர் உள்ளே வரும் போது காதில் ப்ளூடூத் இருந்ததும், வெளியே போகும் போது ப்ளூடூத் இல்லாமல் இருந்ததும் சிசிடிவி காட்சிகளை வைத்து கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் சஞ்சய் ராய் போலீசார் விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் சில நாட்களுக்கு பிறகு தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், வேண்டுமென்றே தன்னை சிக்கவைத்ததாகவும் அந்தர்பல்டி அடித்தார்.
இந்தநிலையில் அவர் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில், தான் செமினார் ஹாலுக்கு போகும் போதே மருத்துவர் இறந்து கிடந்ததாகவும், அதனால் பயத்தில் அங்கிருந்து ஓடியதாகவும் சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சோதனையின் போது அவர் நம்பமுடியாத பல தகவல்களை சொன்னதாக தெரிகிறது. மேலும் உண்மை கண்டறியும் சோதனையின் போது அவர் பதற்றமாகவும், கவலையுடன் இருந்ததாகவும் சொல்கின்றனர்.
சஞ்சய் ராய் தற்போது மாற்றி பேசினாலும், அவர் அந்த நேரத்தில் அங்கே வந்தது ஏன் என்பதற்கான சரியான காரணம் எதையும் சொல்லவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சில முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனை மறைப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் முக்கிய குற்றவாளி என கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் கொலை செய்யவில்லை என யூ டர்ன் அடித்துள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.