Chinmayi | கேரள சர்ச்சை வீடியோ ஆண்களுக்கு SUPPORT செய்த GOSU கொதித்தெழுந்த சின்மயி | Kerala Issue

கேரளாவில் பேருந்து பயணத்தின் போது சிறுமியிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட நபர் மற்றும் அது தொடர்பாகப் புகார் அளித்த பெண் கைது செய்யப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் பாடகி சின்மயி தனது எக்ஸ் தளத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ள கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து கண்ணூர் நோக்கிச் சென்ற ஒரு தனியார் பேருந்தில் பயணம் செய்த தீபக் என்ற நபர், அருகில் இருந்த ஒரு சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது. இதனை அதே பேருந்தில் பயணித்த ஷிம்ஜிதா என்ற பெண் தட்டிக்கேட்டதுடன், அந்த நபரை வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களிலும் பதிவேற்றினார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் அவர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, தீபக்கின் தாயார் அளித்த புகாரின் பேரில், ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி ஷிம்ஜிதாவை கேரளப் போலீஸார் கைது செய்தனர். 
மேலும் பலர் ஷிம்ஜிதாவை கடுமையாக திட்டித்தீர்த்தன. நம்முடைய சமுதாயத்தில் பெண்களுக்கு எப்போதுமே சட்டம் ஆதரவாக தான் இருக்கிறது நிறைய பெண்கள் இதை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம் சமூகவளைதளத்தில் திட்டித்தீர்தனர். 

இந்தச் செய்தியைப் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பாடகி சின்மயி, இந்த விவகாரத்தில் நிலவும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, ஒரு சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியை விட, குற்றம் சாட்டப்பட்ட நபருக்குக் கிடைக்கும் அனுதாபங்கள் குறித்து அவர் வேதனை தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், பேருந்தில் ஒரு சிறுமியிடம் ஒரு ஆண் அத்துமீறி நடந்து கொள்கிறான். இதை வீடியோ எடுத்த ஒரு பெண், அந்த ஆணை அடித்து உங்க வீட்டில் பெண்கள் இல்லையா.. உன் அம்மா, அக்காவிடம் இப்படி நடந்துக்கோ என அடிக்கிறார்.

இந்த ஆண் செய்த தவறை அந்த பெண் அம்பலப்படுத்தியதற்காக அவர் தற்கொலை செய்துக்கொண்டால் அவருக்கும் அனுதாப வீடியோ பரிதாபங்கள் சேனலில் வரும் தானே?" என்ற கேள்வியை எழுப்பினார். சின்மயியின் இந்தப் பதிவு தற்போது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola