தவெக குதிரை பேரம்? "CBI விசாரணை நடத்தணும்" உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
ஆட்சியமைப்பதற்காக தவெக மற்ற கட்சிகளிடம் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதாகக் குற்றசாகட்டுகள் வரும் நிலையில், இதில் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றாலும், தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் தவெக வென்றது.
இருப்பினும் ஆட்சியமைக்க மேலும் 11 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸின் கூட்டணி மற்றும் விசிக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மே 10-ம் தேதி தவெக ஆட்சியமைத்தது.
பின்னர், வக்கெடுப்புக்கு முந்தைய நாள் அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் வீட்டிற்கு முதல்வர் விஜய் சென்றதும், அவருக்கு முன்பாக அங்கு சோபா சென்றதும் எதிர்கட்சிகளால் விமர்சனத்துக்குள்ளானது.
பின்னர், மே 13-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், சி.வி.சண்முகம் உட்பட 25 அதிமுக எம்.எல்.ஏ தங்கள் கட்சிப் பொதுச் செயலாளரின் உத்தரவை மீறி தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனால், திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டின.
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், நம்பிக்கை வாக்கெடுப்பில் குதிரைப் பேரிடம் நடந்திருப்பதாக சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருக்கிறார்.
மேலும் அந்த மனுவில், "தமிழ்நாடு சட்டமன்றத்தில், மற்ற கட்சிகளைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும், தவெக சார்பில் அவர்களுக்கு பெரும் தொகைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவர்கள், இதர சலுகைகளுக்காக தங்கள் கட்சி உத்தரவுகளை மீறியதாகவும் கூறப்படுகிறது.
எனவே இதில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை முடியும் வரை மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைக்க வேண்டும்" என்று மனுதாரர் தெரிவித்திருக்கிறார்.
இந்த மனு உச்ச உச்சநீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால் இது தமிழக அரசியலில் முக்கிய விவாதப்பொருளாகும் மாறும் என்பது குறிப்பிடதக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்




















