துயரசக்தி அம்பலம் பல்லிளிக்கும் காங்கிரஸ் ஸ்டாலின் கடும்விமர்சனம்

Continues below advertisement

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ள நிலையில், இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? என விஜய்க்கு ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

தலைமைச் செயலகத்தில் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த 3 பேரும் அங்கேயே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரிலும் சந்தித்து தவெக-வில் இணைந்தனர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், "‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!

Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.

Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.

Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.

இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?

‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.

NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!" என ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola