உனக்கென்ன துப்பு இருக்கு கொளுத்திப் போட்ட ரவி கொதித்தெழுந்த குஷ்பு

நடிகர் ரவி மோகன், என்னைப் பற்றி பேச உனக்கு என்ன துப்பு இருக்கு என்று பிரபல நடிகையை விமர்சித்திருந்த நிலையில், குஷ்புவின் ட்வீட் கோலிவுட் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

நடிகர் ரவி மோகன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகவே தனது ஆர்த்தியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவரின் விவாகரத்து மனுவும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

அதேவேளையில், ரவி மோகனும் பாடகி கெனிஷாவும் நெருங்கிப் பழகி வந்தனர்.

இதனால் ஆர்த்திக்கு ஆதரவாகப் பலரும் பலரும் சமூக வலைத்தளங்களில், கெனிஷாவை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் தன்மீதான தாக்குதலால், ரவி மோகன் உட்பட எல்லாவற்றையும் விட்டுச் செல்வதாக இன்ஸ்டாகிராமில் நேற்று பதிவிட்டிருந்தார்.

இதனால், செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்த்தி மற்றும் அவரின் குடும்பத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த ரவி மோகன், "3 நடிகர்களின் குடும்பத்தை வாழ்க்கையை கெடுக்க ரெடியா இருந்த மூன்றெழுத்து இட்லி நடிகை, என் life பத்தி பேசுறாங்க. உனக்கு என்னைப் பத்தி பேச துப்பு இருக்கா..." எனக் காட்டமாகப் பேசியிருந்தார்.

இது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை குஷ்பு தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “சிலர் தங்கள் DNA-வை நிரூபிப்பதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள். நான் சொல்வது சரிதான் என்பதை நிரூபித்ததற்கு நன்றி” என்று பதிவிட்டார்.

இதனால், ரவி மோகன் நடிகை குஷ்புவைத்தான் மறைமுகமாக விமர்சித்ததாகவும், அதற்குத் தான் குஷ்பு பதிலடி கொடுத்திருப்பதாகவும் பலரும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola