Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM மனு கொடுக்க நீண்ட வரிசை! தலைமை செயலகத்தில் கூட்டம்

Continues below advertisement

இது உங்க மகனோட ஆட்சி, அண்ணனோட ஆட்சி என முதலமைச்சர் விஜய் கரூரில் பேசிய நிலையில், இன்று முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுப்பதற்காக தலைமை செயலக வாசலில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். 

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், முதலமைச்சர் தனிப்பிரிவில் மனுக்கள் குவிந்து வருகின்றன. புகார் பெட்டியில் மனுக்களை போட நீண்ட வரிசையில் மக்கள் தினமும் காத்திருக்கின்றனர். அதனால் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க ஏதுவாக வாசலிலேயே பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

நேரடியாக வருவது மட்டுமல்லாமல் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு 1100 என்ற தொலைபேசி எண்ணின் மூலமும் புகார் பதிவு செய்யலாம். இதுமட்டுமல்லாமல் இணையதளம் மற்றும் செயலி மூலமாகவும் மனு கொடுக்கும் வசதி இருக்கிறது. இந்தநிலையில் இன்று தலைமை செயலகத்தில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

கரூரில் பேசிய முதலமைச்சர் விஜய், யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க முடியாது என சொல்லுங்கள், இது உங்க மகனோட, அண்ணனோட ஆட்சி என சொன்ன நிலையில், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு கொடுக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேரில் மனு அளித்தால் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola