Fake Police comissioner : காக்கி உடை, Siren கார், கையில் துப்பாக்கி.. போலீஸிடம் மாட்டிய போலி கமிஷனர்! Fake Police | Fake Gun

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே கமிஷனர் எனக் கூறி சிக்கிய போலி கமிஷனர் விஜயன் பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த விஜயன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நஷ்டமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பட்டப்படிப்பு படித்த விஜயனால் அதிகளவு சம்பாரிக்க முடியவில்லை என அவரது மனைவி திட்டியதால் மனம் உடைந்த விஜயன் சீக்கிரமாக செட்டில் ஆவது எப்படி என்று சிந்திக்க தொடங்கினார். சமூகத்தில் பெரிய நபராக காட்டிக் கொள்ளவும் தமிழ்நாடு போலீஸ் கமிஷனர் வேடமணிந்து பல்வேறு இடங்கள் சுற்றுவந்துள்ளார்.

ஆங்காங்கே பல்வேறு பொய்களை சொல்லி மரியாதை மட்டுமின்றி கூடவேஎ பணத்தையும் சம்பாதிக்க தொடங்கி உள்ளார். இந்நிலையில் வெளிமாநிலங்களில் சுற்றித்திரியும் போது விஜயனின் போலித்தனம் குறித்த புகார்கள் தமிழ்நாடு காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. திண்டுக்கல் பட்டிவீரன் பட்டியில் விஜயன் சிக்கிய நிலையில் ஐபிசி சட்டப்பிரிவு 420-இன் கீழ் கைது செய்யப்பட்டு பெரியகுளம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

விஜயன் குறித்த செய்தி பரவவும் அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் திண்டுக்கல் போலிசாரிடம் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். விஜயன் குறித்து மளமளவென புகார்கள் குவிவதை கொண்டு காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கைதான விஜயன் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரநாயுடு, திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், புதுச்சேரி முன்னாள் ஆளுநர் கிரண்பேடி, கர்நாடகாவில் பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா என முக்கிய நபர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவ தொடங்கி உள்ளது. இவர் தனியார் தொலைகாட்சி ஒன்றில் வேலை செய்த சமயத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் அவை என விஜயன் விசாரணையில் தெரிவித்துள்ளார். ஒரிஜனல் போலீசை விஞ்சும் அளவிற்கு டுபாக்கூர் போலீஸ் விஜயன் நடந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு விசாரணை முடிவுக்கு பின்பு தான் விஜயனின் முழு அலப்பறைகள் வெளியாகும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram