’’இனிமேல் லஞ்சம் வாங்கினால் எனக்கு WHATSAPP பண்ணுங்க’’நம்பர் கொடுத்த CM விஜய்

Continues below advertisement

தமிழகத்தில் இனி அரசு ஊழியர்களோ அதிகாரிகளோ லஞ்சம் வாங்கினால் பொதுமக்கள் புகார் அளிக்க புதிய வாட்சப் உதவி எண் விஜய்யின் தவெக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஊழல் இல்லா தமிழகம் என்ற முழக்கத்துடன் ஆட்சியை தொடங்கியது தவெக அரசு. சமீபத்தில் கரூரில் நடைபெற்ற முதல்வர் விஜய் யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாதுனு சொல்லிருங்க உங்க பின்னாடி நான் இருக்கேன் என மக்களிடம் பேசி இருந்தார். இந்நிலையில் அடுத்த சில நாட்களிலேயே அரசு அலுவலங்களில் நடைபெறும் லஞ்சம் குறித்த புகார்களுக்கென பிரத்யேக வாட்சப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழ்நாட்டில் லஞ்சத்தை ஒழிக்க அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் லஞ்சம் குறித்த புகார்களை எவ்வித சிரமமுமின்றி தெரிவிக்கும் வகையில் 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் புகார்களை அனுப்பலாம். இது தவிர, 044-22321090, 044-22321085, 044-22310989 மற்றும் 044-22342142 ஆகிய தொலைபேசி எண்கள் வழியாகவும் பொதுமக்கள் தங்களது லஞ்சப் புகார்களைப் பதிவு செய்யலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்ததும் மாற்றத்திற்கான பல அதிரடி முன்னெடுப்புகளை கையில் எடுத்துள்ள தவெக அரசு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola