’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?
’’ஐயோ போதும்டா சாமி..கொடுமை தாங்கல..இனிமே என் வாழ்க்கையை நான் நிம்மதியா வாழப்போறேன்’’ என நடிகை அனுபமா பரமேஸ்வரன் புலம்பி தள்ளியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை அனுபமா பரமேஸ்வரனும் நடிகர் துருவ் விக்ரமும் காதலித்து வந்ததாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக, துருவ் விக்ரம் அனுபமாவை தனது கண்ட்ரோலில் வைத்திருந்ததாகவும் அது தாங்காமல் தான் இருவரும் பிரிந்துவிட்டதாக இன்ஸ்டாகிராம் வாசிகள் கிசுகிசுத்து வருகின்றனர்.
நடிகை அனுபமா பரமேஸ்வரனும் துருவ் விக்ரமும் பைசன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த திரைப்பட சூட்டிங்க்கின் போது இருவருக்கும் நட்பாகி, அந்த நட்பு விரைவில் காதலாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்பது ரிலேஷன்ஷிப் குறித்த கேள்விகளுக்கு வெட்கப்படுவது இன்ஸ்டாகிராமில் ஒரே பாடல் போட்டு போட்டோக்களை பதிவுடுவது என ரோமியோ ஜூலியட் போல வலம் வந்தனர். அனுபமா துருவ்வின் இன்ஸ்டா கேப்சனை டிகோட் செய்யவே இணையத்தில் தனி பட்டாளம் உண்டு எனலாம்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அனுபமா நேற்று இன்ஸ்டாவில் ஒரு ரீலை பதிவிட்டிருந்தார். ரீல் என்னவோ அனுபமா மிகவும் சந்தோஷமாக இருக்கும் வீடியோ ஒன்றாக இருப்பினும், அதன் கீழே போடப்பட்ட கேப்ஷன் தான் பிரேக்கப் வதந்தியை தூண்டிவிட்டுள்ளது.
அதில், சில நேரங்களில், மன அமைதி கிடைக்கணும்னா நமக்கு செட் ஆகாத சில விஷயங்களை அப்படியே விட்டுட்டு நகர்ந்துடணும். இன்னைக்கு அந்த அமைதி எனக்குக் கிடைச்சிருக்கு.
இன்னைல இருந்து, எனக்கான குரலை நான் தேர்ந்தெடுக்கிறேன். என் வாழ்க்கையை நான் வாழப்போறேன். இனி யார் கிட்டயும் பர்மிஷன் கேட்கப் போறதில்லை. இனி எந்தப் பயமும் இல்லை. எனக்கான வழியை நானே கண்டுபிடிச்சு, என் வாழ்க்கையை நான் எவ்வளவு மிஸ் பண்ணேங்கிறதை உணர்ந்து, அதை மறுபடியும் நேசிக்கத் தொடங்கியிருக்கேன்.
அப்புறம், ரொம்ப நாளா நான் சொல்லணும்னு நினைச்ச ஒரு விஷயம் இருக்கு... ரொம்பக் காலமா என்னால சொல்ல முடியாமப் போன ஒரு விஷயம்.
ஐ லவ் யூ ஆல்! (உங்கள் எல்லாரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்).
எனக்கு சப்போர்ட்டா நின்னதுக்கும், என்னை நம்புனதுக்கும், என் லைஃப் முழுக்க அன்பை அள்ளித் தந்ததுக்கும் ரொம்ப தேங்க்ஸ். இதை நான் இதுக்கு முன்னாடி அவ்ளோவா சொன்னது இல்லனா கூட, உங்க அன்பை நான் எப்போதுமே மனசார உணர்ந்திருக்கேன். எனக்கு ரொம்பத் தேவையான நேரத்துல நீங்க அனுப்புன ஒவ்வொரு மெசேஜும், பிரேயரும், காட்டிய அன்பும் என்னை வந்து சேந்துச்சு.
என்னை மறுபடியும் எனக்கே மீட்டுக் கொடுத்த பிரபஞ்சத்துக்கு (Universe) நன்றி.
என் காயங்கள் ஆறுறதுக்கு... என் சுதந்திரத்துக்கு... என்னை நானே தேர்வு செய்றதுக்கு... கடைசியா, எந்தத் தயக்கமும் இல்லாம, முழுக்க முழுக்க எனக்கான இந்த வாழ்க்கையை வாழப்போறதுக்கு... சியர்ஸ்!
என பதிவிட்டுள்ளார்.
மேலும் அடுத்த பதிவாக தன்னுடைய அழகிய புகைப்படங்களை பதிவிட்டு, அதுக்கு கீழ கேப்சன்ல இன்னொருத்தவங்களோட அனுமதிக்காகவோ, அவங்க பாட்டு செலக்ட் பண்றதுக்காகவோ இல்ல கேப்ஷன் எழுதித் தர்றதுக்காகவோ வெயிட் பண்ண வேண்டியதில்லைன்னு நினைக்கும்போது... போஸ்ட் போடுறதே செம ஜாலியா இருக்கு! எனக்குறிப்பிட்டுள்ளார்.
கேப்ஷன் சாங் செலக்ஷன் ஹிண்ட் துருவ்வத்தான் அனுபமா மறைமுகமா தாக்கியிருக்காங்கனு திரை வட்டாரங்கள்ல பேச்சு எழுந்திருக்கு..