Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

Continues below advertisement

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி பொதுமக்கள் மற்றும் கடைகள் மீது மோதி அராஜகம் செய்த போதை ஆசாமியை பிடித்து மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த வகையில் தாறுமாறாக சென்றுள்ளது. இதனை கவனித்த அப்பகுதி மக்கள் பதற்றமடைந்துள்ளனர். இதனையடுத்து அந்த காரை ஓட்டிய நபர் சரமாரியாக சாலையில் இருந்தவர்கள் மீதும் சாலையோர கடைகள் மீது காரை ஏத்தி அட்டூழியம் செய்தார். இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த காரை சுற்றி வளைத்து ஓட்டுநரை தாக்க முற்பட்டனர். ஆனால் சினிமா ஸ்டண்ட் காட்சி போல் அந்த கார் தாறுமாறாக சென்றுள்ளது.

பின்னர் ஒருவழியாக காரை நிறுத்தி கண்ணாடியை உடைத்து காரை ஓட்டிய நபரை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அந்த நபர் மிகுந்த போதையில் இருந்ததாகவும் காரை விட்டு வெளியே கூட வரமுடியாத நிலையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola