Singer Mano sons issue | பதுங்கிய மனோ மகன்கள்POLICE-க்கு கிடைத்த சிக்னல் நடந்தது என்ன?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமதுபோதையில் பாடகர் மனோவின் மகன்கள் சிறுவனை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மனோவின் மகன்கள் இருவரும் ஆந்திராவில் தலைமறைவாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பாடல் பாடி அசத்தியவர், பாடகர் மனோ. அவருடைய வீடு வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் கால்பந்து விளையாடி முடித்து விட்டு, 20 வயது இளைஞர் ஒருவரும், 16 வயது சிறுவனும் பாடகர் மனோ வீட்டின் அருகே அமைந்துள்ள ஹோட்டலுக்கு உணவு சாப்பிட வந்துள்ளனர்.
அப்போது மதுபோதையில் இருந்த மனோவின் இரு மகன்கள் வீட்டின் வாசலில் தன்னுடைய நண்பர்களுடன் நின்றுக்கொண்டிருந்துள்ளனர். அந்த வழியாக சாப்பிட்டுவிட்டு வந்த சிறுவன் மற்றும் இளைஞர் பாடகர் மனோவின் வீட்டை பார்த்தப்படி சென்றுள்ளனர், இதை பார்த்த அவரது மகன்கள் என்ன முறைச்சு பாக்குற? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் எல்லை மீறிய வாக்குவாதம், கைகலப்பாக மாறியுள்ளது. இதில் 16 வயது சிறுவனையும் அவருடன் வந்த இளைஞரையும் பாடகர் மனோவின் மகன்கள் கட்டையை வைத்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பலத்த காயத்துடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, இருவரும் தந்த புகாரின் அடிப்படையில் மனோவின் மகன்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மகன்களின் செல்போனில் கிடைத்த சிக்னலின் படி தனிப்படை போலீசார் ஈசிஆர் பகுதியில் தேடி வந்த நிலையில் தற்போது ஆந்திராவில் தலைமறைவாகி உள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படை போலீசார் ஆந்திர விரைந்து தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மொத்தம் 5 பேர் இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக சொல்லபடும் நிலையில், ஏற்கெனவே இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பாடகர் மனோவின் மகன்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.