Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
குந்தவையை இப்போ வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது என பேசிய பார்த்திபனுக்கு கோபமாக பதிலடி கொடுத்துள்ளார் நடிகை த்ரிஷா.
தவெக தலைவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக சொல்லி விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார் அவரது மனைவி சங்கீதா. இந்த நேரத்தில் திருமண விழா ஒன்றுக்கு விஜய்யும் த்ரிஷாவும் ஒரே நிறை உடையணிந்து ஒன்றாக வந்தது விமர்சனத்தில் சிக்கியது. விவாகரத்து பற்றி பேசிய விஜய் அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் அது அந்த அளவுக்கு ஒர்த் இல்லை என்று சொல்லியிருந்தார்.
இந்த நேரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபனிடம் திரைப்பிரலங்கள் சிலரின் ஃபோட்டோக்களை காட்டி அவர்களை பற்றி பேச சொல்லியிருந்தனர். அப்போது பொன்னியின் செல்வன் பட த்ரிஷாவை காட்டியதும் “குந்தவையை இப்போ வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது. நிறைய பிரச்சினைகளை உண்டாக்காமல் இருப்பதற்காக சொல்கிறேன். எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது. சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதைகளை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்” என சொல்லியிருந்தார்.
அவரது கருத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்தது. இந்தநிலையில் பார்த்திபனின் கருத்துக்கு நடிகை த்ரிஷா கோபமாக பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் ”ஒரு நபர் தனது உதவியாளர் மூலம் தெரிவித்த வேண்டுகோளின் பேரில் எனது பெயரும் படமும் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொன்னார்கள். கையில் மைக் இருப்பதால் மட்டும் ஒருவருடைய கருத்து அறிவார்ந்ததாகவோ அல்லது நகைச்சுவையானதாகவோ மாறிவிடாது. அது முட்டாள்தனத்தை தான் சத்தமாக வெளிப்படுத்துகிறது. அறிவு இல்லாமல் பேசப்படும் அநாகரிகமான வார்த்தைகள். அவை யாரை பற்றி பேசப்படுகிறதோ அதைவிட பேசுபவரின் தரத்தையே அதிகம் வெளிப்படுத்துகின்றன” என தெரிவித்துள்ளார்.