Saranya Ponvannan | ‘’தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையுமா?’' நடிகை சரண்யா TIPS
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபெண்கள் தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையாது கூடும் நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தாய்ப்பால் வாரத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகையான சரண்யா பொன்வண்ணன் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தனக்கு ஏற்பட்ட மகப்பேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அத்துடன் தனது குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வளர்த்தாகவும், அதனால் தன் இரண்டு பெண் குழந்தைகளும் நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் மருத்துவர்களாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்
பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையாது கூடும் நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தாய்ப்பால் வாரத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகையான சரண்யா பொன்வண்ணன் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தனக்கு ஏற்பட்ட மகப்பேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அத்துடன் தனது குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வளர்த்தாகவும், அதனால் தன் இரண்டு பெண் குழந்தைகளும் நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் மருத்துவர்களாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்