Radhika Sarathkumar : ’’கேரவனில் ரகசிய வீடியோ கண் முன்னாடி நடந்துச்சு’’ ராதிகா பகீர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமலையாள படப்பிடிப்பின்போது கேரவனில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுக்கப்பட்டதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாள திரையுலகமே ஸ்தம்பித்து போய்விட்டது. இதனையடுத்து தமிழ் தெலுங்கு என பல்வேறு நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட கசப்பான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் மூத்த நடிகை ராதிகா சரத்குமார் நேர்காணல் ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்களை பகிரந்துள்ளார். அதில் பேசிய அவர், “கேரளாவில் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் நிர்வாண காட்சிகளை பதிவு செய்கின்றனர். அதை செட்டில் நடிகர்கள் ஒன்றாக உட்கார்ந்து மொபைலில் பார்த்து ரசிப்பதை நான் நேரடியாக பார்த்து உள்ளேன். இதனால் நான் பயந்து போய் ஹோட்டலில் அறை எடுத்து ஆடையை மாற்றி உள்ளேன்.
இது குறித்து சக நடிகைகளுக்கும் எச்சரித்துள்ளேன். பல நேரங்களில் பாதுகாப்பு கோரி நடிகைகள் என் கதவை தட்டுவார்கள். அவர்களுக்கு நான் பாதுகாப்பு கொடுத்துள்ளேன். இனிமேல் இதுபோன்று நடந்தால் கேரவன் பிரச்னை விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை செருப்பால் அடிப்பேன் ” என்று கூறியுள்ளார். மலையாள திரைப்பட உலகில் பாலியல் புகார் விவகாரம் வெடித்து கிளம்பியுள்ள நிலையில், அத்திரைப்பட துரை குறித்து ராதிகா பேசியிருப்பது கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தொடர்ந்து பேசிய ராதிகா, முன்னதாக அரசியல் வாதிகள், உச்ச நட்சத்திரங்கள் என சிலரிடம் இருந்து தனக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் நடந்துள்ளதாகவும், ஆனால் அவர்களின் பெயரை தற்போது தெரிவிக்க விருப்பமில்லை என அவர் தெரிவித்துள்ளது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது