Allu Arjun vs revanth Reddy : எனக்கு மனசாட்சி இல்லையா!தப்பா பேசாதீங்க ரேவந்த்!அல்லு அர்ஜுன் பதிலடி

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் கைது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அல்லு அர்ஜுன் இடையேயான முன்விரோதம் காரணமாக அரங்கேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் என்ன நாட்டுக்காக பார்டரில் நின்று சண்டை போட்டாரா வெறும் நடிகர் தானே என ரேவந்த் பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை கூட்டியுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க சென்ற ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதற்கு காரணம் அல்லு அர்ஜூன் முன்னறிவிப்பின்றி அதே திரையரங்கிற்கு படம் பார்க்க வந்ததாகவும் அதனால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பியதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்து புகார் வரை சென்றது. இந்த புகாரின் அடிப்படையில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் நேற்று கைது செய்யப்பட்டார். 

ஓரிரவு அவர் சிறையில் கழித்த பின்னர் இன்று காலை ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் அல்லு அர்ஜுனின் கைது பல்வேறு தரப்பினரின் கண்டனங்களை பெற்று வருவதோடு, அப்பகுதியில் போராட்டங்களையும் வெடிக்க செய்த்து.
இந்நிலையில் இந்த கைது நடவடிக்கை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பழி வாங்கும் செயல் என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரேவந்த் ரெட்டியிடம் அல்லு அர்ஜுன் கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.. அதாவது நமது அரசியல் சூப்பர் ஸ்டார் நமது திரைப்பட சூப்பர் ஸ்டாரை கைது செய்துவிட்டாரே என மக்கள் கோபத்தில் உள்ளனர் என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த ரேவந்த் ரெட்டி, “ஒருவரை ஜெயிலுக்கு அனுப்பியது குறித்து இவ்வளவு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால், ஒரு பெண் தன் உயிரை இழந்து இருக்கிறார். அவரைக்குறித்து நீங்கள் ஒரு துளியும் கவலைப்படவில்லை. அந்தப் பெண்ணின், குடும்பம் எப்படி இருக்கிறது.. அந்த ஏழை பெண்ணின் குடும்பத்தினரின் வாழ்க்கை என்ன ஆனது? என்று எதுவும் கேட்கவில்லை. அந்தப் பெண்ணின் குழந்தை 11 நாட்களாக கோமாவில் இருக்கிறான். அவன் மீண்டு வந்து அம்மா எங்கே என்று கேட்டால் அம்மா இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? இது குறித்தெல்லாம் நீங்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. சினிமாவில் நடிப்பது அவர் வேலை, அதன்மூலம் பணம் குறைவாக வரப்போகிறது அல்லது அதிகமாக வரப்போகிறது. இதில் உங்களுக்கும் எனக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. அவர் என்ன நாட்டுக்காக பார்டரில் நின்று சண்டை போட்டாரா படம் தயாரிக்கிறார் பணம் சம்பாதிக்கிறார் அவ்வளவுதான் என காட்டமாக தெரிவித்திருந்தார் ரேவந்த் ரெட்டி.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola