Ganapathy Rajkumar Profile : அ.மலையை அலறவிட்டவர்..செந்தில் பாலாஜியின் மனசாட்சி! யார் இந்த ராஜ்குமார்?

Continues below advertisement

சவால்கள் நிறைந்த கோவை மக்களவை தொகுதியில் எளிதாக அண்ணாமலையை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திமுக வேட்பாளர்..யார் இந்த கணபதி ராஜ்குமார் என்பதை பார்க்கலாம்

28 ஆண்டுகளுக்கு பிறகு கோவை மக்களவை தொகுதியை திமுக கைப்பற்றி இருப்பது, அக்கட்சியினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1980, 1996 ஆகிய ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த தேர்தலில் கோவை தொகுதியை திமுக நேரடியாக கைப்பற்றியுள்ளது.

 

அதிலும் நட்சத்திர அந்தஸ்தும், பலம் வாய்ந்த வேட்பாளராக கருதப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை 1 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரமாண்ட வெற்றியை தி.மு.க. பெற்றுள்ளது.

 

60 வயதான கணபதி ராஜ்குமார், கணபதி பகுதியை சேர்ந்தவர்.  எம்.ஏ, எல்.எல்.பி, பிஎச்டி படித்துள்ள இவர், விவசாயம் செய்து வருகிறார். அதிமுகவில் பல ஆண்டுகளாக பொறுப்பில் இருந்து வந்த கணபதி ராஜ்குமார், 3 முறை கோவை மாநகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார். இரண்டு முறை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவராக இருந்த இவர், 2014 ம் ஆண்டு நடந்த கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 வரை கோவை மாநகராட்சி மேயராக இருந்தார்.


எஸ்.பி. வேலுமணி ஆதரவாளராக இருந்த இவர், அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.  பின்னர் எஸ்.பி. வேலுமணி உடன் மோதல் ஏற்பட்ட நிலையில், கட்சி பணிகளில் இருந்து அவர் ஓரங்கப்பட்டார். இதையடுத்து கடந்த 2020 திமுகவில் கணபதி ராஜ்குமார் சேர்ந்த நிலையில், அவருக்கு மாநகர மாவட்ட அவைத்தலைவர் பதவி தரப்பட்டது. இவர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளராக இருந்து வந்தார்.

திமுகவில் வேட்பாளராக பலர் போட்டியிட ஆர்வம் காட்டிய நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. படித்தவர், மேயராக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்ற முறையில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. சவால்கள் நிறைந்த கோவை மக்களவை தொகுதியில் எளிதாக அண்ணாமலையை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் கணபதி ராஜ்குமார் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram