Sriperumbudur Town Panchayat Chairman Election : காங். வேட்பாளரை தோற்கடித்த திமுக!கதறும் காங்கிரஸார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppSriperumbudur Town Panchayat Chairman Election : ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என சுயேச்சை மற்றும் பாமக உறுதியாய் இருக்கும் காரணத்தினால், திமுக தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் குமாரின் மனைவி சாந்தி சதீஷ்குமார் தலைமை அறிவித்த காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக வேட்பு மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட சாந்தி சதிஷ் குமார் 11 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார் மொத்தம் 15 வாக்குகளில் செல்வமேரி அருள்ராஜ் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் திமுகவினர் தங்களுக்கு துரோம் செய்துவிட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.