<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு</title><atom:link href="https://tamil.abplive.com/travel/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 08:27:57 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[Kudremukh: குதிரேமுக்கில் பூத்துக் குலுங்கும் நீலக் குறிஞ்சி! மலை முழுவதும் கண்கவர் காட்சிகள்!]]></title><link>https://tamil.abplive.com/news/india/kudremukh-blue-kurinji-flowers-bloom-a-stunning-natural-attraction-in-karnataka-tnn-274663</link><comments>https://tamil.abplive.com/news/india/kudremukh-blue-kurinji-flowers-bloom-a-stunning-natural-attraction-in-karnataka-tnn-274663#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 08:22:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/kudremukh-blue-kurinji-flowers-bloom-a-stunning-natural-attraction-in-karnataka-tnn-274663</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span style=&quot;color: #ba372a;&quot;&gt;&lt;strong&gt;Kudremukh Blue Kurinji Bloom:&lt;/strong&gt;&lt;/span&gt; கர்நாடக மாநிலத்தின் இயற்கை வளம் நிறைந்த மலைப்பகுதிகளில் ஒன்றான குதிரேமுக், ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் பசுமை போர்த்திய மலைகள், பரந்த புல்வெளிகள், அடர்ந்த காடுகள் மற்றும் அருவிகள் என குதிரேமுக் பகுதி இயற்கை எழில் நிறைந்த பகுதியாக காட்சியளிக்கிறது. கர்நாடகா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வந்து இயற்கை அழகை ரசித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நீல நிறத்தில் காட்சியளிக்கும் குறிஞ்சி மலர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது குதிரேமுக் மலைப்பகுதியில் அரிய வகை நீலக் குறிஞ்சி மலர்கள் ஆங்காங்கே பூத்துக் குலுங்கி வருகின்றன. பச்சைப் பசேல் என்ற புல்வெளிகளுக்கு மத்தியில் நீலம் மற்றும் ஊதா நிறங்களில் மலர்ந்துள்ள குறிஞ்சிப் பூக்கள், மலைப்பகுதியின் அழகை மேலும் அதிகரித்துள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டு குதிரேமுக்கில் நீலக் குறிஞ்சி மலர்கள் அதிகளவில் காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு சற்று குறைந்த அளவில் மலர்கள் தென்பட்டாலும், இயற்கை ஆர்வலர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அவை வெகுவாக கவர்ந்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குதிரேமுக் வரும் சுற்றுலாப் பயணிகள் மலர்களின் அழகை ரசிப்பதுடன், அவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக பசுமையான மலைப்புல்வெளிகளுக்கு இடையே காணப்படும் நீலக் குறிஞ்சி மலர்கள், இயற்கை புகைப்பட ஆர்வலர்களுக்கு சிறந்த காட்சியை வழங்குகின்றன. இதனுடன், தேசிய பூங்கா எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள டிரெக்கிங் பாதைகளில் பயணம் செய்து, மலைகள், காடுகள், புல்வெளிகள் மற்றும் அருவிகளின் இயற்கை அழகையும் சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பெங்களூருவில் இருந்து 323 கி.மீ. தொலைவில் குதிரேமுக்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குதிரேமுக் கர்நாடகாவின் முக்கியமான இயற்கை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. பெங்களூருவில் இருந்து சுமார் 323 கி.மீ. தொலைவிலும், சிக்கமகளூரில் இருந்து சுமார் 106 கி.மீ. தொலைவிலும் இப்பகுதி அமைந்துள்ளது. கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் இருந்து குதிரேமுக் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளுக்குச் செல்ல பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் உள்ளன. இதனால் இயற்கையை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து செல்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மலர்களை பறிக்க வேண்டாம்... அதிகாரிகள் அறிவுறுத்தல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குதிரேமுக்கில் பூத்துள்ள நீலக் குறிஞ்சி மலர்கள் இயற்கையின் அபூர்வமான பரிசாக கருதப்படுவதால், அவற்றை சுற்றுலாப் பயணிகள் பறித்து சேதப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மலர்களை ரசித்து புகைப்படம் எடுக்கலாம் என்றாலும், அவற்றை சேதப்படுத்தாமல் இருப்பதுடன், சுற்றுப்புறங்களில் குப்பைகளை வீசாமல் தூய்மையைப் பாதுகாப்பதும் அவசியம் என சுற்றுலாத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை வளங்களை பாதுகாப்பதன் மூலமே எதிர்கால தலைமுறையினரும் இதுபோன்ற அரிய காட்சிகளை ரசிக்க முடியும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;குதிரேமுக்கை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குதிரேமுக் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியை மட்டும் சுற்றிப் பார்க்காமல், அருகில் அமைந்துள்ள பல்வேறு இயற்கை மற்றும் ஆன்மீகத் தலங்களுக்கும் செல்லலாம். களசா, ஹொரநாடு, சிருங்கேரி உள்ளிட்ட இடங்கள் ஆன்மீக முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன. இதேபோல் தூனுமன்குந்தி நீர்வீழ்ச்சி, கடம்பி நீர்வீழ்ச்சி, சிரிமனே நீர்வீழ்ச்சி மற்றும் லக்கியா அணை உள்ளிட்ட இடங்களும் இயற்கை அழகை ரசிக்க விரும்புபவர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மலைப்பகுதி முழுவதும் பசுமை நிறைந்து காணப்படும் நிலையில், ஆங்காங்கே பூத்துள்ள நீலக் குறிஞ்சி மலர்கள் குதிரேமுக்கின் இயற்கை அழகுக்கு மேலும் வண்ணம் சேர்த்துள்ளன. இதனால் தற்போது குதிரேமுக் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பசுமையான மலைக்காட்சிகளுடன் நீலக் குறிஞ்சியின் அழகையும் ஒருசேர ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/9951dc3d67e1e544f072981a5d9a216617895271529631319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: ரயில்வேயின் பிரம்மாண்ட ஏற்பாடுகள்!]]></title><link>https://tamil.abplive.com/travel/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-railway-special-arrangements-tnn-274630</link><comments>https://tamil.abplive.com/travel/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-railway-special-arrangements-tnn-274630#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 19:53:24 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ சுற்றுலா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/travel/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-railway-special-arrangements-tnn-274630</guid><description><![CDATA[&lt;p&gt;மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்திற்கு ரயில்வே துறை விரிவான ஏற்பாடுகள்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மெமு' சிறப்பு ரயில்கள்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள்&amp;nbsp; செப்டம்பர் 17 (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தமிழக மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே இதற்காக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் விரிவான சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சிறப்பு ரயில்கள், பயணிகள் வசதிகள், கூட்ட மேலாண்மை, பாதுகாப்பு, தூய்மையான வளாகம், மருத்துவ உதவி ஆகிய அம்சங்கள் இந்த ஏற்பாடுகளில் அடங்கும். பயணிகளின் வசதிக்காக ஆறு கும்பாபிஷேக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை காட்பாடி, சேலம், கரூர் வழியாக சென்னை சென்ட்ரல் - மதுரை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், விழுப்புரம் விருத்தாச்சலம் வழியாக தாம்பரம் - மதுரை - தாம்பரம் சிறப்பு ரயில், சென்னை கடற்கரை - மானாமதுரை - சென்னை கடற்கரை முன்பதிவு இல்லாத 'மெமு' சிறப்பு ரயில்கள் ஆகும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கண்காணிப்பு, டிரோன் மூலம் கண்காணிப்பு போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளும் &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலும்&amp;nbsp; தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக திருநெல்வேலி - கூடல் நகர், ராமேஸ்வரம் - பழனி, போடிநாயக்கனூர் - கூடல் நகர் ஆகிய ரயில் நிலையங்கள் இடையேயும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு உதவிட ஏற்கனவே உள்ள விசாரணை மையத்துடன் நடைமேடை எண் ஒன்றில் மேலும் ஒரு சிறப்பு பயணிகள் உதவி மையம் செயல்படுகிறது. முதியவர்கள், மாற்று திறனாளிகள் ஆகியோரின் வசதிக்காக பேட்டரி கார் வசதியுடன் கூடுதலாக சக்கர நாற்காலிகளும் தயாராக உள்ளன. மதுரை ரயில் நிலையத்தின் தூய்மையை மேம்படுத்த கூடுதலாக 75 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் நிலையத்திற்குள் உள்ளே செல்ல மற்றும் வெளியே செல்ல தனித்தனியாக வழிகள் அமைத்து பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படை உதவி மையமும் செயல்படுகிறது. ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய்&amp;nbsp; பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சிசிடிவி கேமரா கண்காணிப்பு, டிரோன் மூலம் கண்காணிப்பு போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;ரயில் நிலைய கிழக்கு நுழைவாயில் பகுதியில் 3000 பயணிகளும் மேற்கு பகுதியில் 500 பயணிகளும் பயன்படுத்தும் வகையில் காத்திருப்பு பகுதிகள் உள்ளன. இரண்டு நடமாடும் கழிப்பறைகள், கூடுதலாக குடிநீர் குழாய்கள், தானியங்கி பயண சீட்டு வழங்கும் இயந்திரங்கள், போன்றவையும் நிறுவப்பட்டுள்ளன. ரயில்வே ஆம்புலன்ஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதியுடன் ரயில்வே மருத்துவக் குழு, புனித ஜான் ஆம்புலன்ஸ் படை மற்றும் தமிழக அரசு மருத்துவ குழு ஆகியவையும் செயல்படுகிறது. ரயில் நிலையத்தில் உள்ள மூன்று மின் தூக்கிகள், நான்கு எஸ்கலேட்டர்கள் தொடர்ந்து செயல்பட ஜெனரேட்டர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் பயணங்களை முன்பே திட்டமிடவும், உதவி மையங்களையும் மற்றும் குறிப்பிடப்பட்ட காத்திருப்பு பகுதிகளையும் பயன்படுத்தவும், கூட்ட மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்கவும் அறிவுக்றுத்தி ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/dc6805582a0cbb1e99bc4e120235bc811789482165329184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[Travel: ரூ.50 ஆயிரம் பட்ஜெட்டில் வெளிநாடு சுற்றுலா..! எந்தெந்த நாடுகளுக்கு பயணிக்கலாம் - இந்தியர்களுக்கான லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/travel/budget-travel-list-of-7-countries-you-can-visit-from-india-under-rs-50000-world-news-273688</link><comments>https://tamil.abplive.com/travel/budget-travel-list-of-7-countries-you-can-visit-from-india-under-rs-50000-world-news-273688#respond</comments><pubDate>Sun, 6 Sep 2026 10:50:16 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ சுற்றுலா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/travel/budget-travel-list-of-7-countries-you-can-visit-from-india-under-rs-50000-world-news-273688</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Foreign Travel Tips:&lt;/strong&gt; இந்தியாவிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல ஏதுவான 7 வெளிநாடுகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;வெளிநாடுகளுக்கான பட்ஜெட் சுற்றுலா..!&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;வெளிநாடு சுற்றுலா பயணம் என்றாலே அது ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கவனமான திட்டங்கள், மலிவான தங்கும் இடங்களை தேர்வு செய்வது மற்றும் சீசனிற்கு முன்பாகவே சரியான நேரங்களில் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வது மூலம், இந்தியர்கள் வெளிநாடுகளை வெறும் 50 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டிலேயே சுற்றி பார்க்க முடியும். சரியான திட்டமிடல் இருந்தால் ஆசியா மற்றும் வளைகுடாப் பகுதிகளில் உள்ள இடங்களை நான்கு முதல் 5 நாட்களுக்கு குறைந்த பட்ஜெட்டிலேயே சுற்றி பார்க்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/when-should-you-change-your-kitchen-towel-details-in-pics-273686&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ரூ.50 ஆயிரம் பட்ஜெட் - 7 நாடுகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;1. அல்மாட்டி, கஜகஸ்தான்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;மலைகள், ஏரிகள் மற்றும் ஒரு வித்தியாசமான கலாச்சார அனுபவத்தை விரும்பும் இந்தியப் பயணிகளுக்கு அல்மாட்டி ஒரு பிரபலமான தேர்வாகும். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், தற்போதைய நுழைவு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, விசா இல்லாமலேயே அங்கு பயணிக்கலாம். குறைந்த செலவில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு சுமார் ரூ. 2,500 செலவாகும், அதே சமயம் உணவுக்கு ஒரு நாளைக்கு தோராயமாக ரூ. 1,500 தேவைப்படலாம். சீசன் மற்றும் முன்பதிவு தேதியைப் பொறுத்து, இருவழி விமானப் பயணத்திற்கு சுமார் ரூ. 20,000 செலவாகலாம். உள்ளூர் பயணம் மற்றும் சுற்றிப் பார்ப்பதற்காக ஒரு நாளைக்கு கூடுதலாக ரூ. 3,000 வைத்திருப்பது செலவுகளைச் சமாளிக்க உதவும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/WCNdaYUqEzM?si=_eH65cGNillN-Nlh&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;2. இலங்கை&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இந்தியாவிலிருந்து எளிதில் சென்றடையக்கூடிய சர்வதேச பயண விருப்பங்களில் ஒன்றாக இலங்கை விளங்குகிறது. இது கடற்கரைகள், வனவிலங்குகள், வரலாற்றுத் தலங்கள் மற்றும் ரம்மியமான ரயில் பயணங்களை வழங்குகிறது. ஒரு குறுகிய பயணத்திற்கு, தங்குமிடத்திற்கு ஒரு இரவுக்கு சுமார் ரூ. 2,500-ம், உணவுக்கு ஒரு நாளைக்கு ஏறத்தாழ ரூ. 1,500-ம் செலவாகும். இருவழி விமானப் பயணத்திற்கு சுமார் ரூ. 18,000 செலவாகலாம், அதே சமயம் உள்ளூர் சுற்றுப்பயணங்கள் மற்றும் போக்குவரத்திற்கு ஒரு நாளைக்கு கூடுதலாக ரூ. 3,000 தேவைப்படலாம்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;3. மலேசியா&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;நவீன நகரங்கள், தெருவோர உணவுகள், கடற்கரைகள் மற்றும் கலாச்சார ஈர்ப்புகளின் கலவையை மலேசியா வழங்குகிறது. குறைந்த செலவில் பயணம் செய்பவர்களுக்கு கோலாலம்பூர் வசதியாக இருக்கும். ஒரு இரவுக்குத் தங்குமிடக் கட்டணம் சுமார் ரூ. 2,000-இல் இருந்து தொடங்கலாம், உணவுக்கு ஒரு நாளைக்கு ஏறக்குறைய ரூ. 1,200 செலவாகும். இருவழி விமானப் பயணச்சீட்டுகளுக்கு சுமார் ரூ. 18,000 செலவாகலாம், அதே சமயம் உள்ளூர் செலவுகளுக்காக ஒரு நாளைக்கு சுமார் ரூ. 2,000 ஒதுக்கி வைப்பது, சுற்றுலாத் தலங்களைப் பார்ப்பதற்கும் போக்குவரத்திற்கும் உதவும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;Chennai Airport: புறக்கணிக்கப்படும் திருவள்ளூர்..! புதிய ஏர்போர்ட்டால் ஜாக்பாட் அடிக்குமா? கும்மிடிப்பூண்டிக்கு வருமா?&quot; href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-govt-shortlists-cheyyur-gummidipoondi-manellore-sites-to-build-chennais-second-airport-will-it-be-solution-for-long-neglect-of-thiruvallur-273681&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: Chennai Airport: புறக்கணிக்கப்படும் திருவள்ளூர்..! புதிய ஏர்போர்ட்டால் ஜாக்பாட் அடிக்குமா? கும்மிடிப்பூண்டிக்கு வருமா?&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;4. பூட்டான்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இந்தியப் பயணிகளுக்கு பூட்டான் ஒரு சுவாரஸ்யமான தேர்வாகும், ஏனெனில் இந்தியாவிலிருந்து சாலை மார்க்கமாக அங்கு சென்றடைய முடியும், இதனால் சர்வதேச விமானச் செலவுகளைத் தவிர்க்க முடிகிறது. பயணிகள் பாக்டோக்ராவிலிருந்து எல்லையை அடைந்து, அங்கிருந்து பூட்டானை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடரலாம். தங்குமிடத்திற்கு ஒரு இரவுக்கு சுமார் ரூ. 3,000-ம், உணவிற்கு ஒரு நாளைக்கு ஏறத்தாழ ரூ. 1,200-ம் செலவாகலாம். நாளொன்றிற்கு சுமார் ரூ. 3,000 கூடுதலாகச் செலவாகலாம். பூட்டானில் இந்தியப் பயணிகளுக்கென குறிப்பிட்ட நுழைவுத் தேவைகளும் கட்டணங்களும் உள்ளன, எனவே பயணம் செய்வதற்கு முன் சமீபத்திய விதிமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;5. ஓமன்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;பாலைவனங்கள், மலைகள், கோட்டைகள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் ஆர்வம் கொண்ட பயணிகளுக்கு ஓமன் ஒரு கவர்ச்சிகரமான தேர்வாகும். சில தென்கிழக்கு ஆசிய இடங்களை விட இது சற்று விலை உயர்ந்ததாக இருக்கலாம், ஆனால் கவனமாகத் திட்டமிட்டால் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இ-விசாவிற்கு சுமார் ரூ. 1,700 செலவாகலாம், அதே சமயம் தங்குமிடத்திற்கு ஒரு இரவுக்கு சுமார் ரூ. 3,000 ஆகலாம். உணவிற்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ. 1,500 செலவாகலாம், சாதகமான காலங்களில் இருவழி விமானப் பயணச்சீட்டுகளை சுமார் ரூ. 15,000-க்குக் முன்பதிவு செய்யலாம். நாளொன்றிற்கு கூடுதலாக ரூ. 3,000 தேவைப்படலாம்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;6. கம்போடியா&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;கம்போடியா பழமையான கோவில்கள், துடிப்பான சந்தைகள் மற்றும் மலிவான தங்குமிடங்களை வழங்குவதால், குறைந்த செலவில் பயணம் செய்ய முடியும். எண்ட்ரி விசாவுக்கு சுமார் ரூ. 2,700 செலவாகலாம், அதே சமயம் தங்குமிடத்திற்கு ஒரு இரவுக்கு சுமார் ரூ. 2,000-க்கு செலவாகலாம். உணவுக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ. 1,200 செலவாகலாம். இருவழி விமானப் பயணத்திற்கு சுமார் ரூ. 23,000 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுப்பயணங்கள் மற்றும் உள்ளூர் செலவுகளுக்காக ஒரு நாளைக்கு கூடுதலாக ரூ. 2,500-ஐ ஒதுக்கி வைக்கவும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;7. தாய்லாந்து&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;தாய்லாந்து அதன் கடற்கரைகள், இரவு நேரக் கொண்டாட்டங்கள், கோவில்கள், ஷாப்பிங் மற்றும் தெருவோர உணவுகள் காரணமாக இந்தியப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. தற்போதைய விதிகளுக்கு உட்பட்டு, இந்தியப் பயணிகள் இங்கு வழங்கப்படும் விசா இல்லாத பயண ஏற்பாட்டின் மூலம் பயனடையலாம். தங்குமிடத்திற்கு ஒரு இரவுக்கு சுமார் ரூ. 2,000-ம், உணவிற்கு ஒரு நாளைக்கு ஏறத்தாழ ரூ. 1,200-ம் செலவாகலாம். இருவழி விமானப் பயணத்திற்கு சுமார் ரூ. 15,000-ம், உள்ளூர் இடங்களைப் பார்வையிடுவதற்கும் போக்குவரத்திற்கும் ஒரு நாளைக்குக் கூடுதலாக ரூ. 2,000-ம் செலவாகலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/06/a66478ecdeb649575707d8795225aa451788671964047732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[புதுச்சேரி கடற்கரை இனி வேற லெவல்! ரூ.150 கோடியில் பிரம்மாண்ட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-tourism-development-beach-road-pondy-marina-bharathi-park-273667</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-tourism-development-beach-road-pondy-marina-bharathi-park-273667#respond</comments><pubDate>Sat, 5 Sep 2026 21:39:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-tourism-development-beach-road-pondy-marina-bharathi-park-273667</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு, நகரின் முக்கிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில் சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு மற்றும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி, கடற்கரை, பிரெஞ்சு கட்டிடக்கலை, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ளதால், ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;குறிப்பாக, நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சுமார் 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை சாலை மற்றும் பாண்டி மெரினா பகுதிகளில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் திரண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் இந்தப் பகுதிகளில் மக்கள் கூட்டம் மேலும் அதிகரிப்பதால், பொதுமக்களுக்கான நடைபாதை, பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;கடற்கரை சாலையில் நவீன நடைபாதை&lt;/h2&gt;
&lt;p&gt;இதையடுத்து, தற்போதுள்ள கடற்கரை சாலையை மேலும் விரிவுபடுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியானதாகவும், அழகிய தோற்றத்துடனும் மாற்றுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;கடற்கரையோரம் தற்போது கற்குவியல்களுக்கு மேல் அமைந்துள்ள கிராவல் மண் பாதையை சீரமைத்து, நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயன்படுத்தும் வகையில் நவீன நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;நடைபாதையை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் அழகுபடுத்துவதுடன், பொதுமக்கள் கடலை ரசித்து நேரத்தை செலவிடும் வகையிலும் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;கடல் அலையை ரசிக்க சிறப்பு படிக்கட்டுகள்&lt;/h2&gt;
&lt;p&gt;கடற்கரைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடல் அழகை அருகில் இருந்து ரசிக்கும் வகையில், கடற்கரையோரத்தில் சிறப்பு படிக்கட்டுகள் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;கடல் அலைகளை ரசித்தபடி அமருவதற்கான வசதிகளுடன் இவை அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடற்கரைப் பகுதி சுற்றுலாப் பயணிகளுக்கு மேலும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;ரூ.8 கோடியில் பாரதி பூங்கா புனரமைப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;இதனிடையே, புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதி பூங்காவையும் புதுப்பித்து நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;தற்போது பொலிவிழந்து காணப்படும் பாரதி பூங்காவை சுமார் ரூ.8 கோடி செலவில் புனரமைக்க ஆலோசிக்கப்பட்டது. பூங்காவின் வரலாற்றுச் சிறப்பை பாதுகாப்பதுடன், தற்போதைய தலைமுறையினரையும் குறிப்பாக குழந்தைகளையும் கவரும் வகையில் புதிய வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;குழந்தைகளுக்கான நவீன விளையாட்டு வசதிகள்&lt;/h2&gt;
&lt;p&gt;புனரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, சிறுவர்களுக்கான நவீன விளையாட்டு உபகரணங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கான வசதிகள் அமைக்கப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், பூங்காவின் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்தி, பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் வகையில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h2&gt;ரூ.150 கோடி திட்டங்கள் - அமைச்சர் உத்தரவு&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், கடற்கரை சாலை மேம்பாடு, நடைபாதை அமைத்தல், கடற்கரையோர வசதிகள், பாரதி பூங்கா புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை உள்ளடக்கிய சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான திட்ட முன்மொழிவுகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தத் திட்ட முன்மொழிவுகளை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆய்வு செய்தார். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதற்கேற்ப சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், முன்மொழியப்பட்ட அனைத்து பணிகளையும் விரிவாக ஆய்வு செய்து, அவற்றின் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், மதிப்பீடு மற்றும் செயல்படுத்தும் முறைகள் உள்ளிட்ட விவரங்களுடன் விரிவான திட்ட அறிக்கையை (DPR) விரைந்து தயாரித்து சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதற்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல்கள் பெறப்பட்ட பின்னர், பணிகளை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், புதுச்சேரியின் கடற்கரைப் பகுதிகள் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மேலும் அழகுபெறுவதுடன், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளும் அதிகரிக்கும். அதே நேரத்தில், புதுச்சேரியை தேசிய மற்றும் சர்வதேச அளவில் மேலும் முக்கியமான சுற்றுலா மையமாக உருவாக்குவதற்கும் இந்த மேம்பாட்டுப் பணிகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/05/99f98a53141b07ba54cd0da12f767ed31788624462502194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சில நிமிடங்கள் கையில் இருந்தால் போதும்... மதுரையில் இருந்து பக்கத்து மாவட்டங்களுக்கு ஈசியா பறக்கலாம் !]]></title><link>https://tamil.abplive.com/travel/madurai-helicopter-operations-base-emergency-medical-service-tourism-tnn-272756</link><comments>https://tamil.abplive.com/travel/madurai-helicopter-operations-base-emergency-medical-service-tourism-tnn-272756#respond</comments><pubDate>Fri, 28 Aug 2026 13:59:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ சுற்றுலா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/travel/madurai-helicopter-operations-base-emergency-medical-service-tourism-tnn-272756</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரையில் சுற்றுலாவை மேம்படுத்தவும், அவசர கால மருத்துவ சேவை விரைவுப்படுத்தவும் புதிய ஹெலிகாப்டர் செயல்பாட்டு மையம் தொடக்கம்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;கோயில் நகரம் என்று போற்றப்படும் மதுரைக்கு ஏராளமான சுற்றுளாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். மீனாட்சியம்மன் கோயில், பிள்ளையார்பட்டி, ராமேஸ்வரம், பழனி, திருச்செந்தூர், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல மதுரை மாநகர் மையமாக அமைந்துள்ளது. இதனால் மதுரைக்கு பேருந்து சேவை, ரயில் சேவைகள் மேம்படுத்த பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகர் வளர்ச்சியால் பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் மதுரைக்கு மெட்ரோ திட்டமும் அவசியமான ஒன்று எனவும் வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் அடுத்தகட்ட வளர்ச்சியாக வான்வழி இணைப்பை அதிகப்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் புதிய ஹெலிகாப்டர் செயல்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;சுற்றுலா சார்ந்த ஹெலிகாப்டர் சேவை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தென் தமிழ்நாட்டின் வான்வழி இணைப்பை மேம்படுத்தும் வகையில், VIL Aviation Private Limited நிறுவனத்தின் VIL Heli Station &amp;ndash; South India Helicopter Operations Base ஹெலிகாப்டர் செயல்பாட்டு மையம் மதுரையில் தொடங்கப்பட்டது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குநர் கருமுத்து ஹரி தியாகராஜன் மையத்தை தொடங்கி வைத்தார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ஹெலிகாப்டர் சேவை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த மையம் மூலம் மருத்துவம், அவசரகால சேவைகள், தொழில் மற்றும் சுற்றுலா சார்ந்த ஹெலிகாப்டர் சேவைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாவை மேம்படுத்த வழிபாட்டுத் தளங்களான ராமேஸ்வரம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;குறைந்த நேரத்தில் பயணம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை to திருச்செந்தூர் 30 நிமிடம்&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை to ராமேஸ்வர்ம் 30 நிமிடம்&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை to கொடைக்கானல் 30 நிமிடம்&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை to சென்னை 1 மணி நேரம் 10 நிமிடம்&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை to பெங்களூர் 1 மணி நேரம் 1/2 மணி நேரம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ஹெலிகாப்டரில் 5 நபர்கள் வரை பயணம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும். ஒரு மணி நேரம் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும். இந்த ஹெலிகாப்டரில் 5 நபர்கள் வரை பயணம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/28/5537954ad6451301b71f8e38d26177c91787905734968184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[3,747 அடி உயரத்தில் இப்படி ஒரு இடமா? பெங்களூரு அருகில் இருக்கும் ரகசிய மலை சொர்க்கம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/looking-for-a-quick-weekend-hutridurga-trek-near-bangalore-route-map-timings-fort-history-essential-trek-tips-tnn-272706</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/looking-for-a-quick-weekend-hutridurga-trek-near-bangalore-route-map-timings-fort-history-essential-trek-tips-tnn-272706#respond</comments><pubDate>Fri, 28 Aug 2026 11:49:32 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/looking-for-a-quick-weekend-hutridurga-trek-near-bangalore-route-map-timings-fort-history-essential-trek-tips-tnn-272706</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;Travel With ABP:&lt;/strong&gt; இன்றைய அவசரமான இயந்திர வாழ்க்கையில், குறிப்பாக பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இயங்கும் பன்னாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களுக்கு பணிச்சுமையால் மனஅழுத்தம் ஏற்படுவது இயல்பாகிவிட்டது. இந்த மனஅழுத்தத்தில் இருந்து விடுபடவும், வார இறுதி நாட்களைப் பயனுள்ள வகையில் கழிக்கவும் பலரும் இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு மலையேற்றப் பிரியர்கள் பெரிதும் விரும்பும் இடங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து திகழ்கிறது ஹுத்ரிதுர்கா மலை. ஒரே நாளில் சென்று எளிதாகத் திரும்பிவிடக் கூடிய வகையில் அமைந்துள்ளதால், சாகச விரும்பிகளின் முதன்மைத் தேர்வாக இது மாறியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அமைவிடமும் மலைப்பாதையின் சிறப்பு அம்சங்களும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பெங்களூருக்கு மிக அருகிலுள்ள ராமநகர், கோலார், துமகூரு ஆகிய மாவட்டங்களில் ஏராளமான மலையேற்றத் தளங்கள் அமைந்திருந்தாலும், துமகூரு மாவட்டம் குனிகல் பகுதியில் உள்ள ஹுத்ரிதுர்கா மிகவும் தனித்துவமானது. குனிகல்லில் இருந்து ராமநகரின் மாகடி செல்லும் சாலையில் அமைந்துள்ள இம்மலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,747 அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது. மலை அடிவாரத்தில் இருந்து உச்சியை அடையும் வரை மொத்தம் எட்டு நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மலையேற்றப் பிரியர்கள் பிரதான நுழைவுவாயில் வழியாகவே சாகசப் பயணத்தைத் தொடர முடியும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இயற்கை எழிலும் பழமையான திருக்கோவில்களும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இம்மலையின் அடிவாரத்தில் ஆதிநாராயண சுவாமி கோவிலும், மலையின் நடுப்பகுதியில் சங்கரேஸ்வரர் கோவிலும் அமையப்பெற்று ஆன்மீக அமைதியை வழங்குகின்றன. இக்கோவிலுக்குச் செல்லும் வழியில் இயற்கை சுனைகளும், குளங்களும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. அடிவாரத்தில் இருந்து 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்குள் மலையின் உச்சியை சுலபமாக அடைந்துவிடலாம். உச்சியை அடைந்ததும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான கிராமங்களின் எழிலைக் கண்டு ரசிக்கலாம். குறிப்பாக, காலையில் மலையுச்சியைத் தழுவிச் செல்லும் மேகக்கூட்டங்களின் அழகையும், மாலையில் கண்களுக்கு விருந்தளிக்கும் சூரிய அஸ்தமனத்தையும் இங்கு மனதார அனுபவிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பயணிகள் கவனத்திற்கு மற்றும் வழித்தட விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சொந்த வாகனத்தில் செல்வோர் பெங்களூரில் இருந்து 79 கி.மீ. தொலைவிலுள்ள ஹுத்ரிதுர்காவிற்கு சுமுக சாலை வழியாக நெலமங்களா சந்திப்பை அடைய வேண்டும். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி, மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து குனிகல் சென்று, மாகடி சாலை வழியாக மலையின் அடிவாரத்தை எட்டலாம். பேருந்து அல்லது ரயிலில் பயணிப்பவர்கள் குனிகல் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம் அடிவாரத்தை அடைய முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மலை அடிவாரத்தில் கட்டணத்துடன்கூடிய வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மலைக்குச் செல்பவர்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் சிறுதீனிகளை கையில் எடுத்துச் செல்வது பயணத்தை மேலும் சிறப்பானதாகவும் வசதியானதாகவும் மாற்றும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பாதுகாப்புடன் பயணத்தை முடிக்க பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிகாட்டுதல்கள்:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மலை ஏற்றம் (Trekking) செல்பவர்கள் பாதுகாப்பாகப் பயணிக்கப் பல முன்னேற்பாடுகள் அவசியமாகும். பயணத்திற்கு முன் உடற்தகுதியை வளர்ப்பதுடன், வானிலை, வழித்தடம் மற்றும் வனத்துறையின் அனுமதிகளைச் சரிபார்த்துவிட்டு, உங்கள் பயணத் திட்டத்தை குடும்பத்தினரிடம் தெரிவிப்பது அவசியம். பயணத்தின் போது போதுமான குடிநீர், உலர் உணவுகள், முதலுதவி பெட்டி, ஏற்ற காலணிகள், டார்ச் லைட் மற்றும் பவர் பேங்க் போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மலையேறும்போது அவசரப்படாமல் சீரான வேகத்தில் குழுவாகவே செல்ல வேண்டும்; மூச்சுத்திணறல் அல்லது சோர்வு ஏற்பட்டால் உடனடியாக ஓய்வெடுக்க வேண்டும். பழக்கமில்லாத குறுக்கு வழிகளில் செல்வது, இருட்டிய பின் பயணிப்பது, வனவிலங்குகளை அச்சுறுத்துவது மற்றும் மது அருந்துவது போன்ற ஆபத்தான செயல்களைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, பிளாஸ்டிக் கழிவுகளை மலையில் வீசாமல் மீண்டும் கீழே எடுத்து வந்து சேகரிப்பது பொறுப்புள்ள பயணிகளின் கடமையாகும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/28/9bc699c472dd434875f039ef52aa7aed17878638747571319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கொடைக்கானல் ஏரி ஆக்கிரமிப்புகள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!]]></title><link>https://tamil.abplive.com/travel/kodaikanal-lake-encroachments-street-vendors-municipal-commissioner-madurai-high-court-order-tnn-272320</link><comments>https://tamil.abplive.com/travel/kodaikanal-lake-encroachments-street-vendors-municipal-commissioner-madurai-high-court-order-tnn-272320#respond</comments><pubDate>Mon, 24 Aug 2026 23:08:32 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ சுற்றுலா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/travel/kodaikanal-lake-encroachments-street-vendors-municipal-commissioner-madurai-high-court-order-tnn-272320</guid><description><![CDATA[&lt;p&gt;கொடைக்கானல் ஏரி பகுதியில் தெருவோர வியாபாரிகள், தெருவோர உணவுக்கடை உரிமையாளர்கள், குதிரை சவாரி மற்றும் வாடகை மிதிவண்டி சேவை வழங்குநர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என எனக் கோரி மனு.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்தியாவிலேயே மிக அழகான மலைவாச ஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 'காடுகளின் பரிசு' என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம். &amp;nbsp;கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் ஏரி பகுதியில் தெருவோர வியாபாரிகள், தெருவோர உணவுக்கடை உரிமையாளர்கள், குதிரை சவாரி மற்றும் வாடகை மிதிவண்டி சேவை வழங்குநர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என எனக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;நகராட்சி ஆணையர் பதில் மனு &amp;nbsp;தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;திருவள்ளூர் மாவட்டம், ஆழ்வார்திருநகர், சோமசுந்தரம் தாக்கல் செய்த மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலமான திண்டுக்கல் கொடைக்காணலுக்கு நாள்தோறும் இருந்து பல்லாரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, &amp;nbsp;கொடைக்கானல் ஏரி பகுதியில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. &amp;nbsp;இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர்.&amp;nbsp;எனவே ஏரி பகுதியில் தெருவோர வியாபாரிகள், தெருவோர உணவுக்கடை உரிமையாளர்கள், குதிரை சவாரி மற்றும் வாடகை மிதிவண்டி சேவை வழங்குநர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனதில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன்,சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் மனு குறித்து கொடைக்கானல் நகராட்சி ஆணையர் பதில் மனு &amp;nbsp;தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தன ர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/24/6bec45dbc5818bd4c0d415f13946c8e6_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[ஓணம் பயணம் இனி எளிது: கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!விபரம் இதோ.]]></title><link>https://tamil.abplive.com/travel/traveling-for-onam-is-now-easy-special-trains-to-kerala-announced-here-are-the-details-271903</link><comments>https://tamil.abplive.com/travel/traveling-for-onam-is-now-easy-special-trains-to-kerala-announced-here-are-the-details-271903#respond</comments><pubDate>Fri, 21 Aug 2026 15:56:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ சுற்றுலா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/travel/traveling-for-onam-is-now-easy-special-trains-to-kerala-announced-here-are-the-details-271903</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கேரளா மாநிலங்களில் அனைவரும் கொண்டாடக்கூடிய ஒரு மிகப்பெரிய பண்டிகையாக ஓணம் உள்ளது. மதம், சாதி உள்ளிட்ட எல்லாவற்றையும் கடந்து அனைத்து தரப்பு மக்களும் இணைந்து இந்த பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதற்காக தங்களது இருப்பிடத்தை விட்டு பிற மாநிலங்களில் பணியாற்றும் கேரளாவை சார்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவார்கள். அவர்களுக்கு போக்குவரத்து வசதியை எளிமையாகும் வகையில் அரசு சார்பாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/02/f1088c4d9951cede60df33070cd8d60a1675311770451184_original.jfif&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் ஓணம் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்பவர்களுக்காக இயக்கப்படும். இந்நிலையில் சென்னை சென்ட்ரல் - மங்களூருக்கு சிறப்பு ரயில் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் சிறப்பு ரயிலான இது ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படுகிறது. பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போதனூர் வழியாக பாலகாடு பகுதிக்கு வந்தடைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்ந்து ஷொரனுார், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கண்ணுார், பையனுார், நீலேஸ்வரம், காக்கினாட், கேசர் கோர்ட் வழியாக மறுநாள் 22 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மங்களூர் ஜக்சன் வந்தடையும். மேலும் இந்த சென்னை சென்ட்ரல் - மங்களூரு ஓணம் சிறப்பு ரயில் , ஆகஸ்ட் 22 மற்றும் 28 ஆகிய நாட்களிலும் செயல்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், 21 ஆம் தேதி கிளம்பி 22 அன்று மங்களூர் வந்தடையும் ஸ்பெஷல் ரயில், அங்கிருந்து மாலை 7.15 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 11.35 மணிக்கு வந்து அடையும். ஆகஸ்ட் 22, 29 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு ரயில் இயங்குமென தெற்கு ரயில்வே அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதே போல் சென்னை - கொல்லம் இடையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. செப்டம்பர் 2 ஆம் தேதி வரைக்கும் புதன்கிழமைகளில் மதியம் 3.10 மணிக்கு சென்னையில் இருந்து ரயில் கிளம்பும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/02/74f24775bc7244b35625f8b9ece2a0791775131704024113_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்ந்து மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லம் வந்தடையும் ரயில். மறுமார்க்கமாக வரும் ரயில் செப்டம்பர் 3 ஆம் தேதி வரைக்கும் இயங்கும். காலை 10.40 மணிக்கு கொல்லத்தில் இருந்து கிளம்பும் ரயில் மறுநாள் மாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.மற்றொரு ஓணம் சிறப்பு ரயில் சேலம் வழியாக பெங்களூரு கன்டோன்ட்மென்ட் - கண்ணூர் இடையில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இருமார்க்கமாக இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும் தெலுங்கனா - கேரளா இடையில் ஓணம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சார்லப்பள்ளி - கோட்டயம் ரயில்கள் சேலம், திருப்பூர், போத்தனூர், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது. இது வாரந்திர சிறப்பு ரயிலாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை இயக்கப்படும். மறு மார்க்கமாக கோட்டயம் - சார்லப்பள்ளிரயில் 31 ஆம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/21/3e72b4ed903c44ffe2a6e519ae25e9281787307830258193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[மலைகளின் ரகசிய அழகை ரசிக்கணுமா? ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பா போக வேண்டிய 5 இடங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-monsoon-tourism-top-5-tourist-places-to-visit-in-august-ooty-kodaikanal-coonoor-courtallam-meghamalai-tnn-271938</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-monsoon-tourism-top-5-tourist-places-to-visit-in-august-ooty-kodaikanal-coonoor-courtallam-meghamalai-tnn-271938#respond</comments><pubDate>Fri, 21 Aug 2026 14:26:35 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-monsoon-tourism-top-5-tourist-places-to-visit-in-august-ooty-kodaikanal-coonoor-courtallam-meghamalai-tnn-271938</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;Top 5 Tourist Places to Visit in August:&lt;/strong&gt; ஆகஸ்ட் மாதத்தின் சாரல் மழையும், குளுமையான காலநிலையும் பயண விரும்பிகளுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் மழைக்காலத்தில் மேலும் பசுமையாகவும் எழிலுடனும் காட்சியளிக்கின்றன. இந்த பருவத்தில் இயற்கை எழிலை ரசிக்க விரும்புவோர் கண்டிப்பாக செல்ல வேண்டிய 5 முக்கிய இடங்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மலைகளின் அரசி ஊட்டி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மழைக்காலத்தில் நீலகிரி மாவட்டத்தின் அழகே தனித்துவமானது. ஆகஸ்ட் மாத சாரல் மழையில் ஊட்டியின் தேயிலைத் தோட்டங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் இயற்கை பள்ளத்தாக்குகள் அனைத்தும் புதிய பொலிவுடன் பசுமைப் போர்வையைப் போர்த்திக் கொள்கின்றன. இங்குள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா சிகரம் ஆகியவை இக்காலகட்டத்தில் மேகக் கூட்டங்களால் சூழப்பட்டு மனதை மயக்கும் சூழலைத் தருகின்றன. ஊட்டியில் இயங்கும் பாரம்பரிய நீலகிரி மலை ரயில் பயணம் இந்த மழைக் காலத்தில் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மலைகளின் இளவரசி கொடைக்கானல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடைக்கானல், ஆகஸ்ட் மாதத்தில் குளிர்ந்த காலநிலையாலும், பனிமூட்டத்தாலும் சூழப்பட்டு பயணிகளைப் பெருமளவில் ஈர்க்கிறது. மழைக்காலத்தில் இங்குள்ள வெள்ளி அருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் நீர் ஆர்ப்பரித்துக்கொட்டுவது காண்போரைக் கவரும் வகையில் அமையும். மேலும், கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வதும், குளுமையான சூழலில் காக்கர்ஸ் வாக் (Coaker's Walk) பாதையில் உலா வருவதும், பில்லர் ராக்ஸ் (Pillar Rocks) காட்சிகளை ரசிப்பதும் பயணிகளுக்கு மன அமைதியைத் தரும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேயிலைத் தோட்டங்களின் குன்னூர்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஊட்டிக்கு மிக அருகில் அமைந்திருந்தாலும், குன்னூர் அமைதியான சூழலை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். ஆகஸ்ட் மாதத்தில் இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் மேகக் கூட்டங்களால் மூடப்பட்டு, காண்பதற்கு வண்ணமயமான ஓவியம் போல் காட்சியளிக்கும். டால்பின் நோஸ் (Dolphin's Nose), லேம்ப்ஸ் ராக் (Lamb's Rock) போன்ற பள்ளத்தாக்குக் காட்சி முனைகளில் நின்று மழைக்கால மேகங்களை ரசிப்பது தனித்துவமான அனுபவமாகும். அமைதியான முறையில் இயற்கையை அனுபவிக்க நினைப்பவர்கள் குன்னூரைத் தேர்ந்தெடுக்கலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தென் இந்தியாவின் குற்றாலம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், மழைக்காலத்தில் தவறவிடக்கூடாத மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும். ஆகஸ்ட் மாதத்தில் இங்கு பெய்யும் சாரல் மழையும், மூலிகை குணங்கள் நிறைந்த நீர்வீழ்ச்சிகளில் கொட்டும் தண்ணீரும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்கின்றன. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் போன்ற நீர்வீழ்ச்சிகளில் சீராகப் பாயும் நீரில் நீராடுவது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. இயற்கை மருத்துவம் மற்றும் அமைதியை விரும்பும் நபர்களுக்கு குற்றாலம் ஒரு சிறந்த இடமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மேகங்களின் புகலிடம் மேகமலை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை, இயற்கையின் மடியில் சில நாட்களைக் கழிக்க விரும்புவோருக்கு ஏற்ற அமைதியான மலைப் பிரதேசமாகும். ஆகஸ்ட் மாதத்தில் மேகமலைப் பகுதி முழுவதும் பனிமூட்டமும், தேயிலைத் தோட்டங்களின் பசுமையும் சூழ்ந்து காணப்படும். இங்குள்ள சுருளி அருவி, சின்னச் சுருளி மற்றும் மணலாறு அணை போன்றவை மழைக்காலத்தில் புதுப்பொலிவு பெறுகின்றன. இயற்கை ஆர்வலர்களுக்கும், நிழற்படக் கலைஞர்களுக்கும் மேகமலை ஒரு சொர்க்கமாகத் திகழ்கிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/21/e2395a27ddfd952991f7f5bee80035ec17873025317501319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/egmore-train-suburban-service-changes-from-august-22-attention-passengers-270533</link><comments>https://tamil.abplive.com/news/chennai/egmore-train-suburban-service-changes-from-august-22-attention-passengers-270533#respond</comments><pubDate>Sat, 8 Aug 2026 17:04:48 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/egmore-train-suburban-service-changes-from-august-22-attention-passengers-270533</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. &amp;nbsp;குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். &amp;nbsp;குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர்.&amp;nbsp; ரயில் பயணிகளுக்கு ஏற்றவாறு அவ்வப்போது பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/02/74f24775bc7244b35625f8b9ece2a0791775131704024113_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நிலையில், எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளால், ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை சில இமு (EMU) ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.சென்னையில் இரவு நேர புறநகர் ரயில்களை நம்பி பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளால், ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை சில இமு (EMU) ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக கடற்கரை&amp;ndash;தாம்பரம் வழித்தடத்தில் பயணிப்பவர்கள் முன்கூட்டியே பயணத் திட்டங்களை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய இரும்பு நடைமேம்பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக, பாதுகாப்பு மற்றும் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக புறநகர் மற்றும் விரைவு ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/02/f1088c4d9951cede60df33070cd8d60a1675311770451184_original.jfif&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதன்படி, ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து இரவு 11.20, 11.40 மற்றும் 11.59 மணிக்கு தாம்பரம் நோக்கி இயக்கப்படும் இமு ரயில்கள் பாதிக்கப்படுகின்றன. வாரத்தின் மற்ற நாட்களில் 3 இமு ரயில்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் 5 இமு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, சில இரவு நேர புறநகர் ரயில்கள் முழு வழித்தடத்தில் செல்லாமல், சென்னை கடற்கரை&amp;ndash;தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை&amp;ndash;கூடுவாஞ்சேரி வரை மட்டுமே பகுதியளவில் இயக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், எழும்பூர் நிலையப் பணிகளின் காரணமாக சில விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படுவதற்கும், இரண்டு விரைவு ரயில்களின் வழித்தடங்கள் தற்காலிகமாக மாற்றப்படுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது ரயில் சேவை விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்து, தேவையெனில் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு ரயில்வே கோட்டம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் புறநகர் ரயில்களை பயன்படுத்துவோர் இந்த மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/16/9613381dec927f450dead09920fa21f61771239488849113_original.jpg" width="220"/></item></channel></rss>