இந்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவுப்படி வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலில் மார்ச் 1ம் தேதி முதல் அதிரடியான மாற்றங்கள் வரவுள்ளது. இதன்மூலம் சைபர் கிரைம் மோசடிகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement

தொலைத்தொடர்புத் துறை போட்ட உத்தரவு

கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி இந்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில், வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், ஸ்னாப்சாட், ஷேர்சாட், ஜியோசாட், அரட்டை தகவல் தொடர்பு செயல்களில் சம்பந்தப்பட்ட பதிவு செய்யப்பட்ட எண்களின் சிம் கார்டு இருந்தால் மட்டுமே அவற்றின் சேவைகள் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற  90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலக்கெடுவானது பிப்ரவரி 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் (மார்ச் 1) 120 நாட்களுக்குள் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்பட்ட அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 1 முதல் மிகப்பெரிய மாற்றம்

அந்த வகையில் தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிகள் 2024 இன் படி, கணக்கைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் எண்களுடைய சிம் கார்டு சம்பந்தப்பட்ட செல்போனில் தொடர்ந்து இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன்மூலம் உரிய சிம் கார்டு இருந்தால் மட்டுமே செய்திகளை அனுப்ப முடியும். ஒருவேளை சிம் கார்டு அகற்றப்பட்டால், மாற்றப்பட்டால் அல்லது செயலிழந்தால் சரியான சிம் கார்டு இருப்பது உறுதி செய்யும் வரை அந்த செல்போனில் மேலே குறிப்பிட்ட செயலிகளின் சேவைகளைப் பெற முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

மேலும் வெப் வாட்ஸ்அப்  மற்றும் டெலிகிராம் சேவைகள் பயன்படுத்துபவர்களாக இருந்தால் இதுநாள் வரை நீங்கள் லாக் அவுட் செய்யும் வரை அந்த செயலி தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும். ஆனால் புதிய விதிப்படி  ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் இவை தனியாக லாக் அவுட்டாகும். மீண்டும் லாக் இன் செய்வதற்கு க்யூ ஆர் கோடு அல்லது வெரிபிகேஷன் கோடு மூலம் செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

சைபர் மோசடிகளை தடுக்க நடவடிக்கை

இந்த நடவடிக்கைகள் மூலம் சரியான நபர்கள் தான் சம்பந்தப்பட்ட அக்கவுண்டை பயன்படுத்துகிறார்கள் என்பதை உறுதி செய்ய முடியும். மேலும் ஆள் மாறாட்ட மோசடிகள், சிம் கார்டு மாற்றி அக்கவுண்டை பயன்படுத்துதல் போன்ற அதிகரித்து வரும் சைபர் மோசடிகளைத் தடுப்பதே சிம் - பைண்டிங் திட்டத்தின் நோக்கமாகும் என மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.மேலும் இந்த காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றும், டிஜிட்டல் பாதுகாப்பிற்கான நடவடிக்கையின் முக்கியத்துவத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.