அதிக எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு ட்ரோஜன் வைரஸ் தாக்குதல்கள் கொண்ட நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்றும், வாட்ஸ்அப்பின் குளோன் செய்யப்பட்ட, தேர்ட் பார்ட்டி அதிகாரப்பூர்வமற்ற வெர்ஷன் நாட்டு மக்களின் சாட்களை உளவு பார்ப்பதில் முன்னணியில் உள்ளது என்று ஒரு புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.


ஜிபி வாட்ஸ்அப்


கடந்த நான்கு மாதங்களில் 'ஜிபி வாட்ஸ்அப்' எனப்படும் வாட்ஸ்அப்பின் பிரபலமான குளோன் செய்யப்பட்ட மூன்றாம் தரப்பு பதிப்பு ஸ்பாம் என்று இணைய பாதுகாப்பு நிறுவனமான ESET இன் அறிக்கை கூறியுள்ளது. இந்த தீங்கிழைக்கும் ஆப் ஆடியோ மற்றும் வீடியோ பதிவு உட்பட பலவிதமான உளவு பார்க்கும் திறன்களைக் கொண்டுள்ளன என்றும் கூறி உள்ளது.


"குளோன் செய்யப்பட்ட இதுபோன்ற ஆப்ஸ் கூகுள் பிளேயில் கிடைக்கவில்லை, எனவே, முறையான வாட்ஸ்அப்புடன் ஒப்பிடும்போது பாதுகாப்பு சோதனைகள் எதுவும் செய்யப்படுவது இல்லை, மேலும் பல்வேறு பதிவிறக்க இணையதளங்களில் கிடைக்கும் பதிப்புகள் ஸ்பேம், வைரஸ்களால் சூழப்பட்டுள்ளன" என்று அறிக்கை கூறியது.



சீனாவுக்கு பிறகு இந்தியா


இந்தியா மே முதல் ஆகஸ்ட் 2022 வரை 'மோசி' எனப்படும் மிகப்பெரிய இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) போட்நெட்டை உருவாக்கும் போட்களுக்கான புவி இருப்பிடமாக சீனாவிற்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா 53 சதவிகிதமும், இந்தியா 35 சதவிகிதமும் கொண்டுள்ளது. ஐஓடி போட்நெட் 'Mozi' ஆனது மே முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் 5,00,000 இல் இருந்து 3,83,000 ஆக  குறைந்துள்ளது. அதாவது ஒரு சி.டி.என்.டி.க்கு 23 போட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Rain Alert: அடுத்த 5 நாட்களுக்கு மழை வரப்போகுது.. சென்னையில் என்ன நிலை? வானிலை அறிவிப்பு இதோ..


போட்நெட்


இருப்பினும், சீனாவும் இந்தியாவும் அந்தந்த நாடுகளுக்குள் அதிக எண்ணிக்கையிலான ஐஓடி போட்களை கொண்டுள்ளன. "2021 இல் அதன் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் கைது செய்யப்பட்டதிலிருந்து 'Mozi' போட்நெட் மனித மேற்பார்வையின்றி இயங்கும் தன்னியக்க பைலட்டில் உள்ளது என்ற அனுமானத்தை இந்த புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன", என்று அறிக்கை கூறியது.



ரஷ்ய ஐபி அட்ரஸ்


எண்ணிக்கை குறைந்தாலும் கூட, தொடர்ந்து ரஷ்ய ஐபி அட்ரஸில் இருந்து ரிமோட் டெஸ்க்டாப் புரோட்டோகால் (RDP) தாக்குதல்கள் வந்துகொண்டிருக்கின்றன. "ransomware மூலம் அதிகம் குறிவைக்கப்பட்ட நாடாகவும் ரஷ்யா இருந்தது, போர் காரணமாகவும், சில தாக்குதல்கள் அரசியல் ரீதியாக அல்லது கருத்தியல் ரீதியாக உந்துதல் பெற்றன," என்று ESET இன் தலைமை ஆராய்ச்சி அதிகாரி ரோமன் கோவாக் கூறினார்.


இந்த அறிக்கை பெரும்பாலும் சாதாரண பயனர்களை பாதிக்கும் அச்சுறுத்தல்களை ஆய்வு செய்தது. அதன்படி, "க்ரிப்டோ மற்றும் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு நாணயங்களை நேரடியாகப் பாதிக்கும் அச்சுறுத்தல்களைப் பொறுத்தவரை, மேகேகார்ட் எனப்படும் வெப் ஸ்கிம்மர் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் முன்னணி அச்சுறுத்தலாக உள்ளது. கிரெடிட் கார்டு விவரங்களை அது திருடுவதாக தெரிகிறது", என்று கோவாக் கூறினார்.