மொபைல்ஃபோன் சந்தையில் பல ஆண்டுகளாக முன்னணி நிறுவனமாக இருந்து வருவது தென்கொரியவை பூர்வீகமாக கொண்ட சாம்சங் நிறுவனம். இந்நிறுவனம் கடந்த மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது அதன்படி தங்களுக்கான க்ளவுட் ஸ்டோரேஜை தாங்கள் திரும்ப பெறப்போவதாகவும் ஏப்ரல் 29-க்குள் உங்கள் தகவல்களை ஒன் ட்ரைவுக்கு மாற்றிக்கொள்ளுங்கள் என்பதுதான் அந்த அறிவிப்பு. சாம்சங் க்ளவுடின் மூலம், மொபைல் ஸ்டோரேஜில் உள்ள புகைப்படம், வீடியோ, ஆடியோ, தொடர்புகள் என அனைத்தையும் சேமித்து வைக்கமுடியும். இதன் காரணமாக மொபைல்ஃபோனின் ஸ்டோரெஜ் இடைவெளி அதிகமாக கிடைக்கும் மேலும் சேமித்து வைக்கப்பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும். சாம்சங் வெளியிட்ட இந்த அறிவிப்பால், சாம்சங் பயனாளர்கள் பலரும் சேமித்து வைத்திருந்த தகவல்களை ஒன் ட்ரைவுக்கு உடனடியாக மாற்றினர்.
Samsung Warning| நீங்க சாம்சங் பயனாளரா.. தகவல் பறிபோகலாம்.. உஷாரய்யா உஷாரு..
ABP NADU | 05 May 2021 10:08 PM (IST)
வருகிற ஜுன் 30-ஆம் தேதிக்குள் சாம்சங் க்ளவுடில் உள்ள தகவல்களை பதிவிறக்கம் செய்து அதனை கூகுள் ட்ரைவ் அல்லது வேறு ஒரு ட்ரைவில் சேமித்துக்கொள்ள முடியும். ஜுன் 30-ஐ கடந்துவிட்டால் சாம்சங் க்ளவுடில் சேமித்து வைக்கப்பட்ட அனைத்து தகவல்களும் அழிந்துவிடும்
சாம்சங்
Published at: 05 May 2021 10:08 PM (IST)