Womens World Boxing :  74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கும் உலக மகளிர் குத்துச் சண்டை போட்டி இன்று தொடங்குகிறது.


13வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் போட்டி மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 2006 மற்றும்  2018ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடப்பது மூன்றாவது முறையாகும்.  போட்டியை தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 


உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் 12 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.  ஒலிம்பிக்கில் வெங்கலம் வென்ற லவ்லினா, நிகாத் ஹரின், நீது உட்பட 12 இந்திய வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்க உள்ள நிலையில், இந்தியா சார்பில் 12 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.  இந்தியா சார்பில், நிது கங்காஸ் (48 கிலோ), நிகத் ஜரீன் (50 கிலோ), சாக்ஷி சவுத்ரி (52 கிலோ), ப்ரீத்தி (54 கிலோ), மனிஷா மவுன் (57 கிலோ), ஜெய்ஸ்மின் லம்போரியா (60 கிலோ), ஷஷி சோப்ரா (63 கிலோ), மஞ்சு பாம்போரியா ( 66 கிலோ), சனம்சா சானு (70 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), சவீட்டி பூரா (81 கிலோ) மற்றும் நுபுர் ஷியோரன் (81+ கிலோ) ஆகியோர் பங்கேற்கின்றனர்.


இவர்களில் நிகாத் ஜரீன் கடந்த போட்டியில தங்கப்பதக்கமும், பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற நிது கங்காஸ், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினா போர்கோஹைன் ஆகியோர் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.