இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை  டிவிட்டரில் அறிவித்த சச்சின், தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறினார். சமீபத்தில் நடைபெற்ற உலக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில், இந்தியா லெஜண்ட்ஸ் அணி சார்பில் சச்சின் விளையாடினார். அதன்பிறகே, அவருக்கு தொற்று உறுதியானது.




அவரைத் தொடர்ந்து, அந்தத் தொடரில் விளையாடிய முன்னாள் வீரர்கள் பத்ரிநாத், யூசுப் பதான், இர்பான் பதான் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்தத் தொடரில் பங்கேற்ற மற்ற வீரர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த சச்சின் டெண்டுல்கர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘அனைவரின் வாழ்த்துகளுக்கும்,  பிரார்த்தனைகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவ ஆலோசனையின் படி முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இன்னும் சில தினங்களில் இல்லத்திற்கு திரும்புவேன் என நம்புகிறேன். அனைவரும் கவனத்துடன் பாதுகாப்பாக இருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். 


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thank you for your wishes and prayers. As a matter of abundant precaution under medical advice, I have been hospitalised. I hope to be back home in a few days. Take care and stay safe everyone. <br><br>Wishing all Indians &amp; my teammates on the 10th anniversary of our World Cup 🇮🇳 win.</p>&mdash; Sachin Tendulkar (@sachin_rt) <a >April 2, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


மேலும், 2011 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்று, இன்றுடன் 10 ஆண்டுகள் ஆனதையொட்டி, இந்தியர்களுக்கும் மற்றும் தனது அணி வீரர்களுக்கும் வாழ்த்து கூறினார்.