ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 154 ரன்களை குவித்துள்ளது. இதன் மூலம், 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் ஆடி வருகிறது.

பரபரப்பான கட்டத்தில் ஐபிஎல்:

பரபரப்பான இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது ஐபிஎல் தொடர். புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்குள் முன்னேற 10 அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே சென்னை அணியின் தொடக்க வீரர் ஷேக் ரஷீத் டக் அவுட் ஆனார்.

இருப்பினும், இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடினார். 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது, அவர் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். அதிகபட்சமாக டேவால்ட் பிரேவிஸ் 42 ரன்கள் எடுத்தார். 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து சென்னை அணி 154 ரன்களை எடுத்தது. இதன் மூலம், 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய ஹர்ஷல் படேல் 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

தொடர்ந்து சொதப்பும் சென்னை அணி:

வழக்கத்திற்கு மாறாக சென்னை அணி நடப்பு தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. சென்னை அணியில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மாற்று வீரர்கள் கூட வலுவாக இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

கேப்டனாக தோனி மீண்டும் பொறுப்பேற்ற பிறகும் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இம்மாதிரியான சூழலில், சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத்திடம் தோல்வியே காணாத சென்னை அணி, தனது சாதனையை தொடருமா என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.