சென்னையில் நடைப்பெறும் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யபட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஐபிஎல் தொடர் 2025: 

மும்பை இந்தியனஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைப்பெற உள்ளது, இதற்காக நாளை முதல் சேப்பாக்கில் சென்னை அணி விளையாடும் நாட்களில் போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள  மாற்றம் பின்வருமாறு..

டாடா ஐபிஎல் சீசன் -2025 கிரிக்கெட் போட்டிகள் 23.03.2025, 28.03.2025, 05.04.2025, 11.04.2025, 25.04.2025, 30.04.2025 & 12.05.2025 சென்னை M.A சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளன. இப்போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு போட்டி நடைபெறும் நாட்களில் 1700 மணி முதல் 23.00 மணி வரையிலும், பின்வருமாறு வாகன நிறுத்த ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்:-

1. வாகன நிறுத்தத்திற்கான அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள்:-

அனுமதி அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். 

2. அனுமதி அட்டை வாங்காத வாகனங்கள்:-

 போட்டியை காண சொந்த வாகனத்தில் வரும் நபர்கள் கதீட்ரல் சாலை மற்றும் R.K சாலை வழியாக காமராஜர் சாலை சென்று மெரினா கடற்கரை சாலை அடைந்து மெரினா கடற்கரை சர்விஸ் சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, பின்னர் சுரங்கப்பாதைகள் பயன்படுத்தி நடைபயணமாக சென்று மைதானத்தை அடையலாம்.

போட்டியை காண டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற வணிக வாகனங்களில் வரும் நபர்களுக்கு அண்ணாசாலையிலிருத்து வாலாஜா சாலைக்குள் சென்று மைதானத்திற்கு அருகில் இறக்கிவிடப்பட்டு, மேலும் வாகனங்கள் சிவானந்தா சாலையில் நிறுத்த அனுமதிக்கப்படும்.

3. வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகர பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது. அவ்வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலையில் மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்ல/இறக்கிவிடுவதற்கு அனுமதிக்கப்படும். பொதுமக்கள் பிரஸ் கிளப் சாலை வழியாக சென்று கிரிக்கெட் மைதானத்தை அடையலாம். 

சாலை பெயர் மாற்றப்பட்ட பாதை
விக்டோரியா ஹாஸ்டல் சாலை  விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து செல்ல அனுமதி இல்லை.
பெல்ஸ் சாலை

1. பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக இயக்கப்படும். பாரதி சாலையிலிருந்துபெல்ஸ் சாலை செல்ல அனுமதிக்கப்படும்.

2. வாலாஜா சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை. 

பாரதி சாலை ரத்னா கஃபேயிலிருத்து காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலையில் திருப்பிவிடப்படும்.

பொதுமக்கள் MRTS உள்ளூமில் அல்லது மெட்ரோ மயில் அரசு எஸ்டேட் மெட்ரோ நிலையம் மூலமாக சேப்பாக்கம் இரயில் நிலையம் வருமாறு  அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.