<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!</title><atom:link href="https://tamil.abplive.com/sports/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 12 Aug 2026 01:34:16 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-chief-minister-trophy-2026-online-registration-august-31-collector-tnn-270857</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-chief-minister-trophy-2026-online-registration-august-31-collector-tnn-270857#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 22:18:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-chief-minister-trophy-2026-online-registration-august-31-collector-tnn-270857</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம்: &lt;/strong&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தில் &amp;rsquo;முதலமைச்சர் கோப்பை &amp;ndash; 2026&amp;rsquo; விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள், &amp;nbsp;ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாகப் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன் குமார், &amp;nbsp;தெரிவித்துள்ளார். இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விளையாட்டுத்துறை ஊக்கம் மற்றும் நோக்கங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) சார்பில் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இப்போட்டியானது, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரையும் விளையாட்டுச் செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபடச் செய்யும் ஒரு மாபெரும் முயற்சியாகும். கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மறைந்திருக்கும் திறமையான விளையாட்டு வீரர், வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய மேடையமைத்துத் தந்து, தகுந்த அங்கீகாரமும் ஊக்கத்தொகையும் பரிசுகளும் வழங்கி கௌரவிப்பதே இப்போட்டிகளின் முதன்மை நோக்கமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;செப்டம்பர் 4 முதல் போட்டிகள் தொடக்கம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்களிடையேயும் மாணவ, மாணவிகளிடையேயும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் மாவட்ட அளவில் கோலாகலமாகத் தொடங்கப்படவுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;45 வகையான விளையாட்டுப் போட்டிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த ஆண்டு மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் 38 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. நடப்பு 2026 ஆம் ஆண்டில் விளையாட்டு வீரர்களின் திறனை மேலும் வெளிக்கொண்டு வரும் வகையில் வில்வித்தை, வூஷு (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங் மற்றும் நீர் விளையாட்டுகளான காயக்கிங் (Kayaking), கேனோயிங் (Canoeing) ஆகிய புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த ஆண்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பங்கேற்பதற்கான தகுதிகள் மற்றும் வயது வரம்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்போட்டிகள் ஐந்து முதன்மைப் பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;1. பள்ளி மாணவர்கள்:&lt;/strong&gt; 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் (01.01.2008 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்).&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;2. கல்லூரி மாணவர்கள்:&lt;/strong&gt; இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் (01.07.2001 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்).&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;3. பொதுப் பிரிவினர்:&lt;/strong&gt; 15 முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;4. மாற்றுத் திறனாளிகள்:&lt;/strong&gt; அனைத்து வயதுடைய மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;5. அரசு ஊழியர்கள்:&lt;/strong&gt; அனைத்துத் துறை அரசுப் பணியாளர்களும் இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பரிசுத் தொகை விவரங்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாவட்ட மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு:&lt;/strong&gt;&lt;br /&gt;* முதல் பரிசு: ₹3,000&lt;br /&gt;* இரண்டாம் பரிசு: ₹2,000&lt;br /&gt;* மூன்றாம் பரிசு: ₹1,000&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு,&lt;/strong&gt;&lt;br /&gt;* முதல் பரிசு: ₹1,00,000&lt;br /&gt;* இரண்டாம் பரிசு: ₹75,000&lt;br /&gt;* மூன்றாம் பரிசு: ₹50,000&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாநில அளவில் குழுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு:&lt;/strong&gt;&lt;br /&gt;* முதல் பரிசு: ₹75,000&lt;br /&gt;* இரண்டாம் பரிசு: ₹50,000&lt;br /&gt;* மூன்றாம் பரிசு: ₹25,000&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இணையதளப் பதிவு மற்றும் கூடுதல் விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 06.08.2026 முதல் 31.08.2026 வரை &lt;a href=&quot;https://sdat.tn.gov.in&quot;&gt;https://sdat.tn.gov.in &amp;nbsp;&lt;/a&gt;&lt;a href=&quot;https://tncmtrophy.sdat.in&quot;&gt;https://tncmtrophy.sdat.in &lt;/a&gt;என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியாளர்கள் தனிநபராகவோ அல்லது தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலமாகவோ பதிவுகளை மேற்கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை கைபேசி எண்: 7401703497 மற்றும் அலுவலக தொலைபேசி எண்: 04365-253059 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிக அளவில் இணையதளத்தில் பதிவு செய்து இப்போட்டிகளில் பங்கேற்றுத் தங்கள் திறமையை வெளிப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன் குமார், &amp;nbsp;கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/40ed02a6140f3649108a9d37029899ea1786466888308186_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/chief-minister-trophy-2026-sports-kanchipuram-cm-trophy-registration-sdat-cm-trophy-kanchipuram-collector-announcement-tnn-270813</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/chief-minister-trophy-2026-sports-kanchipuram-cm-trophy-registration-sdat-cm-trophy-kanchipuram-collector-announcement-tnn-270813#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 15:30:18 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/chief-minister-trophy-2026-sports-kanchipuram-cm-trophy-registration-sdat-cm-trophy-kanchipuram-collector-announcement-tnn-270813</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு முழுவதும் உள்ள விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது. மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் இப்போட்டிகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவ்வகையில் 2026-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி மாவட்ட அளவில் தொடங்கப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் tncmtrophy.sdat.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து பதிவு செய்து கொள்ளலாம். இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய வரும் ஆகஸ்ட் 31, 2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் தனிநபராகவோ அல்லது தங்களது பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலமாகவோ பதிவுகளை மேற்கொாள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;புதிய விளையாட்டுப் பிரிவுகள் அறிமுகம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த ஆண்டு 38 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல் கூடுதலாக வில்வித்தை, வுஷூ (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், கயாக்யிங் (Kayaking) மற்றும் கேனோயிங் (Canoeing) ஆகிய நீர்விளையாட்டுகள் என புதிதாக 8 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெறவுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பங்கேற்பதற்கான வயது வரம்பு விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்போட்டிகள் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகின்றன. பள்ளி மாணவர் பிரிவில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதிற்குட்பட்ட மாணவர்களும் (01.01.2008 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்), கல்லூரி பிரிவில் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களும் (01.07.2001 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்) பங்கேற்கலாம். மேலும் 15 முதல் 35 வயது வரை உள்ள பொதுப் பிரிவினர், அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளும் இதில் கலந்து கொள்ளத் தகுதியுடையவர்கள் ஆவர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பரிசுத் தொகை விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3,000, இரண்டாம் பரிசாக ரூ. 2,000, மூன்றாம் பரிசாக ரூ. 1,000 வழங்கப்படும். மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 75,000, மூன்றாம் பரிசாக ரூ. 50,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும். அதேபோல மாநில அளவிலான குழுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75,000, இரண்டாம் பரிசாக தலா ரூ. 50,000, மூன்றாம் பரிசாக தலா ரூ. 25,000 வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்போட்டிகள் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்பும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703481 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த திறமையான விளையாட்டு வீரர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 31-க்குள் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/a08b380726f7b544c1f99aea8d92323d17864423929061319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !]]></title><link>https://tamil.abplive.com/sports/sivaganga-tamil-nadu-chief-minister-trophy-2026-sports-competitions-registration-tnn-270734</link><comments>https://tamil.abplive.com/sports/sivaganga-tamil-nadu-chief-minister-trophy-2026-sports-competitions-registration-tnn-270734#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 23:34:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ விளையாட்டு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/sports/sivaganga-tamil-nadu-chief-minister-trophy-2026-sports-competitions-registration-tnn-270734</guid><description><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் முதலமைச்சர் கோப்பை-2026 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ளோர்,&amp;nbsp; உரிய ஆவணங்களுடன் &lt;a href=&quot;http://tncmtrophy.sdat.in/&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot; data-saferedirecturl=&quot;https://www.google.com/url?q=http://tncmtrophy.sdat.in&amp;amp;source=gmail&amp;amp;ust=1786470330619000&amp;amp;usg=AOvVaw18fg91zogx4PFUVlzaFYJb&quot;&gt;tncmtrophy.sdat.in&lt;/a&gt;&amp;nbsp;என்ற இணையதளத்தில்&amp;nbsp; முன்பதிவு செய்திட&amp;nbsp; வேண்டும் -&amp;nbsp;மாவட்ட ஆட்சித்தலைவர்&amp;nbsp; தகவல்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;முதலமைச்சர் கோப்பை-2026&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டு தோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மண்டல மாநில அளவில் நடத்தி வருகிறது. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியானது, அனைத்து தரப்பினரையும் விளையாட்டில் ஈடுபட செய்யும் மிகச்சிறந்த முயற்சியாகும். இதன் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களை பாராட்டி, அவர்களை ஊக்குவித்து,&amp;nbsp; உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை வழங்குவது, இந்த போட்டிகளில் முக்கிய நோக்குமாகும்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;பொதுமக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள முதலமைச்சர் விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி மாவட்ட அளவில் தொடங்கப்பட்வுள்ளது. விளையாட்டு பேட்டிகளில் பங்குகொள்ள ஆர்வமுள்ளோர் வருகின்ற 31.08.2026 வரை&amp;nbsp;&lt;a href=&quot;http://tncmtrophy.sdat.in/&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot; data-saferedirecturl=&quot;https://www.google.com/url?q=http://tncmtrophy.sdat.in&amp;amp;source=gmail&amp;amp;ust=1786470330619000&amp;amp;usg=AOvVaw18fg91zogx4PFUVlzaFYJb&quot;&gt;tncmtrophy.sdat.in&lt;/a&gt; என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பவுள்ள போட்டிகளில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷீ (Wush),&amp;nbsp; துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீர்விளையாட்டுக்களான கயாக்யிங் (kayaking) மற்றும் கேனோயிங் (canoeing) போன்ற புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட உள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த போட்டிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் மட்டும் (01.01.2008 அன்று அல்லது அதற்குப்பின் பிறந்தவர்கள் மட்டும்), இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவியர்களும் (01.07.2001 அன்று அல்லது அதற்குப்பின் பிறந்தவர்கள் மட்டும்), 15 முதல் 35 வயது வரை உள்ள பொதுப்பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பரிசு எவ்வளவு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாகரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கு கொள்ள &lt;a href=&quot;http://tncmtrophy.sdat.in/&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot; data-saferedirecturl=&quot;https://www.google.com/url?q=http://tncmtrophy.sdat.in&amp;amp;source=gmail&amp;amp;ust=1786470330619000&amp;amp;usg=AOvVaw18fg91zogx4PFUVlzaFYJb&quot;&gt;tncmtrophy.sdat.in&lt;/a&gt; என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்திட வேண்டும். தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.&amp;nbsp; மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைப்பேசி எண்: 04575-299293 எண்ணில் வேலை நாட்களில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.&amp;nbsp; &amp;ldquo;ஆடுகளம்&amp;rdquo; தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற என்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் அதிக அளவில் பங்கு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ், தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/a90692e1a6f56b544b3a4c16d0f8e0361786385023218184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[Watch Video:  ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!]]></title><link>https://tamil.abplive.com/sports/cricket/ind-vs-slcxi-mohammad-siraj-hattrik-sixer-against-srilanka-cricket-leven-watch-video-270701</link><comments>https://tamil.abplive.com/sports/cricket/ind-vs-slcxi-mohammad-siraj-hattrik-sixer-against-srilanka-cricket-leven-watch-video-270701#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 17:01:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ கிரிக்கெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/sports/cricket/ind-vs-slcxi-mohammad-siraj-hattrik-sixer-against-srilanka-cricket-leven-watch-video-270701</guid><description><![CDATA[&lt;p&gt;இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்திய அணி இலங்கை கிரிக்கட் லெவனுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 363 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி படிக்கல்லின் அபார சதத்தால் 357 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;207 ரன்கள் டார்கெட்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சில் இலங்கை 200 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய இந்திய அணிக்கு 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. 45 ஓவரில் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியாவிற்கு ஜெய்ஸ்வால் 61 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் ஆகினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;சுப்மன்கில் 44 ரன்கள் எடுத்து அவுட்டாக ரிஷப்பண்ட் 28 ரன்களுக்கும், துருவ் ஜுரல் 17 ரன்களுக்கும் அவுட்டாகினர். ஜடேஜா 22 ரன்களுக்கும், மானவ் சுதர் 4 ரன்களுக்கும் அவுட்டாக கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை கேஷரா நுவந்தா வீசினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;en&quot;&gt;Hey &lt;a href=&quot;https://x.com/hashtag/Siraj?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#Siraj&lt;/a&gt; won warm-up match with hat-trick sixes. &lt;a href=&quot;https://x.com/hashtag/GauthamGambhir?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#GauthamGambhir&lt;/a&gt; smile &lt;a href=&quot;https://t.co/jmmo6P3H98&quot;&gt;pic.twitter.com/jmmo6P3H98&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; Studio Flicks (@StudioFlicks) &lt;a href=&quot;https://x.com/StudioFlicks/status/2086697552808681551?ref_src=twsrc%5Etfw&quot;&gt;August 10, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஹாட்ரிக் சிக்ஸர்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்த முகமது சிராஜ் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசினார். பின்னர், அதற்கு அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்தார். 15 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்து சிராஜ் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹாடரிக் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்த முகமது சிராஜிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகவும் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக சிராஜ் உள்ளார். பும்ரா காயத்தால் அவதிப்படும் தருணங்களில் தனி ஆளாக இந்திய அணியை பல முறை காப்பாற்றியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சிறந்த பந்துவீச்சாளர்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;முகமது சிராஜ் மிகப்பெரிய அளவில் பேட்டிங்கில் ஜொலிப்பவர் இல்லையென்றாலும் அவரது பலம் காரணமாக அவர் நல்ல ஹிட்டராக உள்ளார். இந்திய அணிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடும் முகமது சிராஜ் தொடர்ந்து சமீபகாலமாக இந்திய அணியில் இடம் முறையாக கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அடுத்தாண்டு உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில், முகமது சிராஜ் கண்டிப்பாக இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முகமது சிராஜ் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 46 போட்டிகளில் 140 விக்கெட்டுகளையும், 50 ஒருநாள் போட்டிகளில் 76 விக்கெட்டுகளையும், 17 டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் 125 போட்டிகளில் 128 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/63d65dbf7f81f85e508cf22491688bdb1786361426516102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!]]></title><link>https://tamil.abplive.com/sports/mayiladuthurai-south-india-martial-arts-silambam-karate-yoga-competition-270650</link><comments>https://tamil.abplive.com/sports/mayiladuthurai-south-india-martial-arts-silambam-karate-yoga-competition-270650#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 08:57:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ விளையாட்டு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/sports/mayiladuthurai-south-india-martial-arts-silambam-karate-yoga-competition-270650</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை:&lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த ஆறுபாதி பகுதியில் தென்னிந்திய அளவிலான பிரம்மாண்ட சிலம்பம், கராத்தே மற்றும் யோகாசனப் போட்டிகள் விறுவிறுப்பாகவும் நடைபெற்று முடிந்தது. தமிழன் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் இணைந்து நடத்திய இப்போட்டிகள், பாரம்பரிய கலைகளையும் தற்காப்புக் கலைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் மகத்தான தளமாக அமைந்தது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வெளிமாநில வீரர்கள்&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்போட்டிகளை உலக சிலம்ப விளையாட்டு சங்கத்தின் மாநிலச் செயலாளர் விநாயகம் முன்னின்று மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஒரே இடத்தில் திரண்டனர். இதனால் ஆறுபாதி பகுதி முழுவதுமே விளையாட்டுத் திருவிழா போலப் புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வகைப்படுத்தப்பட்ட போட்டிகள்&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;போட்டிகள் அனைத்தும் பல்வேறு வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் மிகத் துல்லியமாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;6 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமியர் பிரிவு, 14 வயது பிரிவு, 17 வயது பிரிவு மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவு என நான்கு முதன்மைப் பிரிவுகளில் போட்டிகள் பிரிக்கப்பட்டு, திறமைகள் வெளிக்கொணரப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் சிறுவர், சிறுமியர் தங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி நடுவர்களையும் பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பாரம்பரிய தற்காப்பு கலைகள்&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பப் போட்டிகள் 'அலங்கார சிலம்பம்' மற்றும் 'தொடுசிலம்பம்' என இரண்டு முதன்மை முறைகளில் நடைபெற்றன. அலங்கார சிலம்பப் பிரிவில் போட்டியாளர்கள் தங்களின் சுழற்சி வேகம், உடலின் நெகிழ்வுத்தன்மை மற்றும் தடி சுழற்றும் நுட்பமான திறன்களை வெளிப்படுத்திச் சுழன்றடித்தனர். தொடுசிலம்பப் பிரிவில் எதிராளியை நுட்பமாகத் தொட்டு புள்ளிகள் பெறும் வேகமும் தற்காப்பு உத்திகளும் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைத்தன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதேபோல, கராத்தே போட்டிகள் 'காத்தா' எனப்படும் பயிற்சி முறை மற்றும் 'குமிதே' எனப்படும் நேரடிச் சண்டை முறை ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டன. கராத்தே வீரர்கள் தங்களின் கட்டுப்பாடான தாக்குதல் நுட்பங்கள், கைகளின் வேகம், கால்களின் துல்லியமான உதைத்தல் முறைகள் மற்றும் மனக் ஒருமைப்பாட்டைத் தெளிவாகப் வெளிப்படுத்தினர். யோகாசனப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ-மாணவிகள், கடினமான ஆசன வடிவங்களை மிக இலகுவாகச் செய்து காட்டி உடலின் வளைந்து கொடுக்கும் தன்மையையும் மூச்சுப் பயிற்சித் திறனையும் நிரூபித்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;குவிந்த பார்வையாளர்கள்&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளைக் காண மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் போட்டியாளர்களின் பெற்றோர்கள் பெருந்திரளாக வருகை தந்திருந்தனர். அரங்கம் முழுவதிலும் கரவொலிகளினாலும் உற்சாகக் கூச்சல்களினாலும் அலைமோதியது. விறுவிறுப்பான இறுதிப் போட்டிகளுக்குப் பிறகு, வெற்றி பெற்ற சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குச் கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு கௌரவம் செய்யப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செய்தியாளர் சந்திப்பில் உலக சிலம்ப விளையாட்டு சங்க மாநிலச் செயலாளர் விநாயகம் கூறுகையில்; &quot;நமது மண்ணின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தையும், உலகளவில் புகழ்பெற்ற கராத்தே மற்றும் மனதையும் உடலையும் ஒருங்கிணைக்கும் யோகாசனத்தையும் தற்கால இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா எனத் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் ஒரே இடத்தில் கூடித் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்தகைய விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களிடையே தன்னம்பிக்கையையும், உடல் ஆரோக்கியத்தையும், மன அடக்கத்தையும் வளர்க்கும். வரும் காலங்களில் இன்னும் பல தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளை மயிலாடுதுறையில் நடத்தி, நமது கிராமப்புற கிராமப்புற மாணவர்களைச் சர்வதேச விளையாட்டு மேடைகளுக்குக் கொண்டு செல்வதே நமது முதன்மை லட்சியம் ஆகும்&quot; என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தென்னிந்திய அளவிலான இப்போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்ததன் மூலம், பாரம்பரிய மற்றும் தற்காப்புக் கலைகளில் மயிலாடுதுறை மண்டலம் மீண்டும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது எனப் பகுதி மக்களும் விளையாட்டு அமைப்புகளும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/4a576b85b66635c0d07846380e89f6fb1786332414603186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?]]></title><link>https://tamil.abplive.com/sports/cricket/ind-vs-sl-test-devdutt-padikkal-chance-to-play-galle-1st-test-replace-sai-sudharsan-270626</link><comments>https://tamil.abplive.com/sports/cricket/ind-vs-sl-test-devdutt-padikkal-chance-to-play-galle-1st-test-replace-sai-sudharsan-270626#respond</comments><pubDate>Sun, 9 Aug 2026 18:44:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ கிரிக்கெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/sports/cricket/ind-vs-sl-test-devdutt-padikkal-chance-to-play-galle-1st-test-replace-sai-sudharsan-270626</guid><description><![CDATA[&lt;p&gt;இந்திய அணி தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. தற்போது நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி இந்த தொடரில் இரு டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;3வது இடத்திற்கு தடுமாறும் இந்தியா:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இரு அணிகளும் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறது. இந்திய அணி சமீபகாலமாகவே டெஸ்ட் போட்டிகளில் மோசமாகவே ஆடி வருகிறது. விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவரது இடத்தில் சுப்மன்கில் ஆடி வருகிறார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;3வது இடத்தில் புஜாரா ஆடுவார். அவருக்கு பிறகு தற்போது வரை இந்திய அணி 3வது இடத்திற்கான சிறந்த வீரரை கண்டுபிடிக்க இயலாமல் தடுமாறி வருகிறது. அதற்காக சாய் சுதர்சனை களமிறக்கி ஆடி வருகின்றனர். அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த சூழலில், இலங்கைத் தொடருக்கு முன்பு அவர் காயத்தில் சிக்கியிருப்பதால் அவர் இந்த தொடரில் ஆடுவதில் கேள்வி எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;படிக்கலுக்கு பொன்னான வாய்ப்பு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதனால், அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இவர் கொழும்புவில் நடந்த &amp;nbsp;பயிற்சி போட்டியில் 164 பந்துகளில் 18 பவுண்டரியுடன் 142 ரன்களை விளாசினார். 26 வயதான தேவ்தத் படிககல் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 90 ரன்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்துள்ளார். 2022ம் ஆண்டு அவர் கடைசியாக பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதன்பின்பு, கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத தேவ்தத் படிக்கல்லுக்கு இந்த தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக ஆடினால் இந்திய அணியில் நீண்ட காலத்திற்கு 3வது இடத்தை ஆக்கிரமிக்கும் அரிதான வாய்ப்பை படிக்கல் பெறலாம். கிடைத்த வாய்ப்பை தேவ்தத் படிக்கல் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வாரா? தன்னை ஒரு அடுத்த நட்சத்திரமாக உருவாக்கிக் கொள்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;3 வடிவத்திலும் அசத்தும் வீரர்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி என 3 வடிவங்களிலும் ஆடும் ஆற்றல் கொண்டவராக திகழும் தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடினால் 3 வடிவ போட்டியிலும் தவிர்க்க முடியாத வீரராக திகழ்வார் என்று கருதப்படுகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வெற்றி பெறுவதற்கு மிக மிக முக்கிய காரணமாக தேவ்தத் படிக்கல் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;26 வயதான படிக்கல் 90 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 89 இன்னிங்சில் 2 ஆயிரத்து 2270 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 101 ரன்கள் எடுத்துள்ளார். 4 முறை நாட் அவுட்டாக திகழ்ந்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/spiritual/surya-remedies-astrological-remedies-related-to-surya-270619&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/09/40f49debbeef44e7aa412d216cf81f0a1786281278485102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?]]></title><link>https://tamil.abplive.com/sports/cricket/asia-cup-2027-dates-out-bangladesh-to-prepare-pitches-mirroring-world-cup-conditions-cricket-news-270589</link><comments>https://tamil.abplive.com/sports/cricket/asia-cup-2027-dates-out-bangladesh-to-prepare-pitches-mirroring-world-cup-conditions-cricket-news-270589#respond</comments><pubDate>Sun, 9 Aug 2026 12:38:39 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ கிரிக்கெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/sports/cricket/asia-cup-2027-dates-out-bangladesh-to-prepare-pitches-mirroring-world-cup-conditions-cricket-news-270589</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Asia Cup 2027 Ind Vs Ban:&lt;/strong&gt;&amp;nbsp; உலகக் கோப்பையை மனதில் கொண்டு பவுன்சிங் மைதானங்களை தயார்படுத்த வங்கதேசம் திட்டமிட்டுள்ளதாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஆசியக் கோப்பை கிரிக்கெட்..!&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அடுத்த ஆண்டின் இறுதியில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக, 2027ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பையை 50 ஓவர் எடிஷனாக நடத்த வங்கதேசம் திட்டமிட்டுள்ளதாம். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்னும் தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், 2027 ஜூன் 18 முதல் ஜூலை 4 வரை போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியை வங்கதேசம் நடத்தும் என பரவலாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/early-signs-of-bad-car-suspension-details-in-pics-270585&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஆசிய கோப்பை 2027 தேதி &amp;amp; இடங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஆசியக் கோப்பைத் தொடர் ஜூன் 18 அன்று தொடங்கி, அதன் இறுதிப் போட்டி ஜூலை 4 அன்று நடைபெற உள்ளது. இதற்கான உத்தேச இடங்களாக மிர்ப்பூர், சட்டோகிராம் மற்றும் சில்ஹெட் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. வங்கதேச கிரிக்கெட் வாரியம் மூன்று மைதானங்கள் குறித்த விவரங்களை ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்துடன் பகிர்ந்துள்ளதாம். இருப்பினும், இறுதி போட்டி நடத்தும் ஏற்பாடுகள் மற்றும் முழுமையான அட்டவணை ஆகியவை இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தவில்லையாம். 2027ம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைக்குத் தயாராகும் அணிகளுக்கு இந்தப் போட்டி மிகவும் பொருத்தமானதாக அமையும் என கூறப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/olJfYs2sCkA?si=q-J2T7MRvJASQXOo&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தயாராகும் பவுன்சி மைதானங்கள்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆசியக் கோப்பை நடைபெறுகிறது. இதனால், வங்கதேசம் தனது நாட்டில் வழக்கமாக அமைக்கும் ஆடுகளங்களுக்கு மாற்றாக, அதிக வேகம் மற்றும் பவுன்ஸ் உடன் கூடிய ஆடுகளங்களைத் தயார் செய்யக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் எதிர்பார்க்கப்படும் சூழல்களுக்கு நெருக்கமான நிலைமைகளை ஆசிய அணிகளுக்கு வழங்குவதற்காக, இந்தப் போட்டித் தொடருக்கு வேகமான, அதிக பவுன்ஸ் கொண்ட ஆடுகளங்களை ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் விரும்புவதாக தெரிகிறது. இது ஆசிய அணிகளின் பந்துவீச்சாளர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுவது மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஆசிய அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கும் மிகப்பெரிய பயிற்சி தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்&quot; href=&quot;https://tamil.abplive.com/news/politics/minister-ramesh-slams-dmk-over-temple-land-scam-issue-ask-devotees-not-use-mobile-phones-in-temple-tn-politics-270581&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;வங்கதேசம் செல்லுமா இந்தியா?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேநிலவும் அரசியல் பதற்றங்கள் காரணமாக, இந்தியாவின் பங்கேற்பு உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. தற்போது, ​​ஆசியக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க இந்தியா மறுக்கும் என்பதற்கு உறுதியான அறிகுறி எதுவும் இல்லை. இந்தியாவின் பங்கேற்பு குறித்த எந்தவொரு முடிவும், இறுதி அட்டவணை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் அதிகாரிகளுக்கு இடையேயான கலந்துரையாடல்களைப் பொறுத்தே அமையும்.&lt;/p&gt;
&lt;p&gt;தற்போதைக்கு, முக்கிய விவரங்கள் தற்காலிகமானவையாகவே உள்ளன. அறிவிக்கப்பட்ட ஜூன் 18 முதல் ஜூலை 4 வரையிலான காலக்கட்டம், முன்மொழியப்பட்ட வங்கதேச மைதானங்கள் மற்றும் வேகமான ஆடுகளங்களுக்கான திட்டங்கள் ஆகிய அனைத்தும் இறுதியானதும் ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/09/ae5e6df7e38fa907ab91e2844dd53f8e1786259261667732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது]]></title><link>https://tamil.abplive.com/sports/india-u31-team-wins-bronze-at-world-youth-transnational-bridge-championships-270305</link><comments>https://tamil.abplive.com/sports/india-u31-team-wins-bronze-at-world-youth-transnational-bridge-championships-270305#respond</comments><pubDate>Thu, 6 Aug 2026 16:26:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராகேஷ் தாரா ]]></dc:creator><category><![CDATA[ விளையாட்டு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/sports/india-u31-team-wins-bronze-at-world-youth-transnational-bridge-championships-270305</guid><description><![CDATA[&lt;p&gt;எட்டு அணிகள் பங்கேற்ற இறுதிச் சுற்று லீக் போட்டியில் இந்தியா 82.34 விக்டரி பாயிண்ட்ஸ் (Victory Points) பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது. சீனாவின் AGOOFANS அணி 89.96 VP-களுடன் தங்கப் பதக்கத்தையும், சீனாவின் U31 அணி 89.47 VP-களுடன் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றின. விசா தாமதம் மற்றும் கடைசி நேர கூட்டணி மாற்றங்கள் போன்ற சவால்களை மீறி இந்திய அணி இந்த வெற்றியைப் பதிவு செய்தது.&lt;/p&gt;
&lt;p&gt;அன்ஷுல் பட்ட், சாக்னிக் ராய், சயந்தன் குஷாரி, ஷுபம் ஆச்சார்யா, சுரஜித் பார் மற்றும் வித்யா படேல் ஆகியோர் அடங்கிய இந்திய அணிக்கு கவுஸ்துப் பெந்திரே கேப்டனாகவும் பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;சில வீரர்களுக்கான சீன விசா தாமதமாக கிடைத்ததால், அணியின் கூட்டணிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஷுபம் ஆச்சார்யாவுடன் நீண்ட காலமாக பயிற்சி பெற்றிருந்த அன்ஷுல், இறுதியில் கொல்கத்தாவைச் சேர்ந்த தேசிய வீரர் சயந்தன் குஷாரியுடன் இணைந்து விளையாடினார். ஷுபம், மத்தியப் பிரதேசத்தின் ராய்பித்புரா கிராமத்தைச் சேர்ந்த வித்யா படேலுடன் இணைந்தார். பிரிட்ஜ் விளையாட்டுக்காக புகழ்பெற்ற இந்த கிராமம் பல திறமையான வீரர்களை உருவாக்கியுள்ளது. பின்னர் சாக்னிக் ராய் மற்றும் சுரஜித் பார் கொல்கத்தாவிலிருந்து வந்து அணியில் இணைந்தனர். எதிர்பாராத இந்த சூழ்நிலையால், தகுதிச்சுற்றின் எட்டு ஆட்டங்களில் ஆறு ஆட்டங்களில் அன்ஷுலும் வித்யாவும் விளையாடினர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் இந்திய அணி ஏழாவது இடத்தைப் பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆகஸ்ட் 5 அன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் எட்டு அணிகளும் ரவுண்ட்-ராபின் முறையில் தலா ஏழு-போர்டு போட்டிகளில் மோதின.&lt;/p&gt;
&lt;p&gt;17 வயதான அன்ஷுலை U31 அணியில் தேர்வு செய்தது குறித்து பயிற்சியாளர் கவுஸ்துப் பெந்திரே கூறுகையில், &quot;அன்ஷுல் தனது திறமையின் அடிப்படையிலேயே இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். அவரது வயது அல்லது புகழின் காரணமாக அல்ல. 17 வயதிலேயே U31 மட்டத்தில் தேவையான ஒழுக்கம், மனஅமைதி மற்றும் கூட்டணியுடன் செயல்படும் திறனை அவர் வெளிப்படுத்தி வருகிறார்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;அன்ஷுல் தனது பள்ளியில் பிரிட்ஜ் கிளப்பையும், BridgeBlitz என்ற பயிற்சி முகாம்களையும் நடத்தி வருகிறார். அவற்றின் மூலம் இந்தியாவின் பல வயது பிரிவு வீரர்கள் உருவாகியுள்ளனர். BridgeBlitz பயிற்சி பெற்ற அணி, 2025 உலக இளைஞர் அணிகள் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பின் அரையிறுதிப் போட்டியிலும் முன்னேறியது.&lt;/p&gt;
&lt;p&gt;பிரிட்ஜ் விளையாட்டைத் தாண்டி, அன்ஷுல் நாய்களின் நடையை இயந்திரக் கற்றல் (Machine Learning) மூலம் பகுப்பாய்வு செய்யும் PawPath என்ற அணியக்கூடிய சென்சார் அமைப்பை உருவாக்கியுள்ளார். இந்த கண்டுபிடிப்புக்கு ISEF Grand Award (Animal Sciences) விருது கிடைத்துள்ளது. தற்போது இது Sniff என்ற செல்லப்பிராணி ஆரோக்கிய தளமாக உருவாக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/06/0918f17e8cd579e04db8cae9511f135717860137699901270_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-student-shashi-new-einstein-world-record-skating-archery-270299</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-student-shashi-new-einstein-world-record-skating-archery-270299#respond</comments><pubDate>Thu, 6 Aug 2026 16:03:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-student-shashi-new-einstein-world-record-skating-archery-270299</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: ஸ்கேட்டிங் செய்துகொண்டே துல்லியமாக அம்பு எய்து, &amp;lsquo;நியூ எய்ன்ஸ்டன் உலக சாதனை&amp;rsquo; (New Einstein World Record) படைத்த புதுச்சேரி மாணவி ஷாஷி, முதலமைச்சர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.&lt;/p&gt;
&lt;h2&gt;அபூர்வ திறமை:&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி மூலக்குளத்தில் இயங்கி வரும் பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் அகாடமியில் (British International Academy) 5-ஆம் வகுப்பு பயின்று வருபவர் மாணவி ஷாஷி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக 'ட்ரோன் ஷூட்டிங் ஸ்கேட்டிங் அகாடமி'யில் (Drone Shooting Skating Academy) பயிற்சியாளர் பிரவீன் வழிகாட்டுதலில் ஸ்கேட்டிங் மற்றும் வில்வித்தை (Archery) பயிற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;அதிவேகமாக ஸ்கேட்டிங் செய்துகொண்டே, தன்னுடைய உடலின் சமநிலையைத் துல்லியமாகப் பராமரித்து, குறித்த இலக்கை நோக்கி அம்பு எய்து அசாத்திய திறமையை ஷாஷி வெளிப்படுத்தியுள்ளார். அதிவேகம், கச்சிதமான உடல் சமநிலை, கூர்மையான ஒருமித்த கவனம் ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் தேவைப்படும் இந்த அரிய கலைத் திறனை, மிகச் சிறிய வயதிலேயே இவர் மிகச் சிறப்பாகச் செய்து காட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.&lt;/p&gt;
&lt;h2&gt;உலக சாதனை அங்கீகாரம்:&lt;/h2&gt;
&lt;p&gt;மாணவி ஷாஷியின் இந்த தனித்துவமான சாதனையைப் பாராட்டி, 'நியூ எய்ன்ஸ்டன் உலக சாதனை' அமைப்பு இதனை அதிகாரப்பூர்வ உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. அதற்கான உலக சாதனை சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி அவ்வமைப்பு கௌரவித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்திற்கு மேலும் ஒரு பெருமைமிக்க உலகச் சாதனை அடையாளத்தை மாணவி ஷாஷி பெற்றுத் தந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;முதலமைச்சர் வாழ்த்து:&lt;/h2&gt;
&lt;p&gt;உலக சாதனை படைத்து மாநிலத்திற்குப் பெருமை சேர்த்த மாணவி ஷாஷி, தனது பயிற்சியாளர் பிரவீன் மற்றும் பெற்றோருடன் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்தார். மாணவியின் சாதனைச் சான்றிதழ்களைப் பார்வையிட்ட முதலமைச்சர், அவரது அசாத்திய திறமையைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தித் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் இம்மாணவி இன்னும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும் ஊக்கமளித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;சிறிய வயதிலேயே தீவிர பயிற்சியினாலும் அர்ப்பணிப்பினாலும் உலக சாதனை படைத்துள்ள மாணவி ஷாஷிக்கு, பள்ளி நிர்வாகத்தினர், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினரும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/06/ee81e04aa17489baf36b8688ef0963161786012327313194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!]]></title><link>https://tamil.abplive.com/sports/cricket/shashank-singh-punjab-kings-allrounder-chhattisgarh-puducherry-domestic-cricketer-270096</link><comments>https://tamil.abplive.com/sports/cricket/shashank-singh-punjab-kings-allrounder-chhattisgarh-puducherry-domestic-cricketer-270096#respond</comments><pubDate>Tue, 4 Aug 2026 19:34:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ கிரிக்கெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/sports/cricket/shashank-singh-punjab-kings-allrounder-chhattisgarh-puducherry-domestic-cricketer-270096</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியின் துணை கேப்டன் ஷஷாங்க் சிங் உள்நாட்டு கிரிக்கெட்டில் சத்திஸ்கர் அணியிலிருந்து விலகி அடுத்த உள்நாட்டுக் கிரிக்கெட் தொடர் சீசனில் புதுச்சேரி அணியில் ஆடவிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;h2&gt;7 ஆண்டு கால பயணம் நிறைவு:&lt;/h2&gt;
&lt;p&gt;ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாகச் செயல்பட்டு வரும் முன்னணி ஆல்ரவுண்டர் ஷஷாங்க் சிங், உள்நாட்டு கிரிக்கெட்டில் சத்தீஸ்கர் அணியில் இருந்து விலகி, வரவிருக்கும் புதிய சீசனில் புதுச்சேரி அணிக்காக விளையாடத் தீர்மானித்துள்ளார். சத்தீஸ்கர் அணிக்காக கடந்த 7 ஆண்டுகளாக விளையாடி வந்த ஷஷாங்க் சிங், அந்த அணிக்காக 24 முதல்தரப் போட்டிகளில் (First-Class) பங்கேற்று 29.19 சராசரியுடன் 905 ரன்களை எடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அவரது 'லிஸ்ட் ஏ' (List A) ஒருநாள் போட்டிப் புள்ளிவிவரங்கள் மிகவும் சிறப்பானவையாக உள்ளன. 31 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 40.30 சராசரி மற்றும் 111.95 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 927 ரன்களைக் குவித்ததுடன் 35 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், சத்தீஸ்கர் அணிக்காக 42 டி20 போட்டிகளில் களமிறங்கி 129.30 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 653 ரன்கள் எடுத்து, 18 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஐபிஎல் தொடரில் எழுச்சியும் சவால்களும்:&lt;/h2&gt;
&lt;p&gt;ஐபிஎல் 2024 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு சிறந்த ஃபினிஷராக உருவெடுத்த ஷஷாங்க் சிங், 164.65 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டில் 354 ரன்களைக் குவித்து அசத்தினார். பெரும்பாலான போட்டிகளில் 5 மற்றும் 6-வது வரிசைகளில் களமிறங்கி இவர் காட்டிய அதிரடி ஆட்டம், மெகா ஏலத்திற்கு முன்பாகவே பஞ்சாப் அணி இவரைத் தக்கவைக்கக் காரணமாக அமைந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்ததில் முக்கியப் பங்காற்றிய போதிலும், ஃபார்ம் இழப்பு, தவறவிட்ட கேட்சுகள் மற்றும் காயம் காரணமாக அந்த சீசனில் அவர் சில சவால்களைச் சந்திக்க நேரிட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;தனது புதிய மாற்றம் குறித்துப் பேசிய ஷஷாங்க் சிங், &quot;புதுச்சேரி அணிக்கு மாறுவது எனக்கு ஒரு புதிய தொடக்கம். காயங்களில் இருந்து முழுமையாக மீண்டுள்ள நிலையில், லிமிட்டெட் ஓவர் 'ஒயிட்-பால்' கிரிக்கெட்டில் எனது பழைய திறமையை மீண்டும் நிரூபிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு&quot; என நம்பிக்கை தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;சத்தீஸ்கர் கிரிக்கெட் சங்கத்துடன் அதிருப்தி:&lt;/h2&gt;
&lt;p&gt;சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தன்னைச் சரியாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்த ஷஷாங்க் சிங், வேறு மாநிலத்திற்கு மாற ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ் (NOC) கோரி விண்ணப்பித்தார். அதனை ஏற்றுச் சங்கமும் என்.ஓ.சி வழங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;நிர்வாகத்துடனான பிரச்சினை குறித்து கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&quot;நிர்வாகத்திற்கும் எனக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. ஐபிஎல் சீசன் முடிந்தவுடனேயே மாநிலச் சங்க அதிகாரிகளிடம் பேச முயன்றேன்; ஆனால் அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;2026 சத்தீஸ்கர் கிரிக்கெட் பிரீமியர் லீக் தொடரில் நான் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கோ, மாநில அணிக்கான பயிற்சி முகாமில் (Conditioning camp) எனது பெயர் ஏன் பரிசீலிக்கப்படவில்லை என்பதற்கோ அவர்களிடம் எந்த விளக்கமும் இல்லை.&lt;/p&gt;
&lt;p&gt;எனக்கு எந்த ஒரு சிறப்புச் சலுகையும் தர வேண்டும் என நான் கேட்கவில்லை. ஆனால், 2023-24 ஆம் ஆண்டிற்கான சிறந்த உள்நாட்டு 'ஒயிட்-பால்' ஆல்ரவுண்டருக்கான பிசிசிஐ (BCCI) விருதை வென்ற ஒரு வீரருக்கு, கேலி-கிண்டல்கள் இல்லாமல் குறைந்தபட்சம் என்ன நடக்கிறது என்ற தெளிவான விளக்கமாவது கிடைத்திருக்க வேண்டும்.&quot;&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஷஷாங்க் சிங், வரவிருக்கும் உள்நாட்டுச் சீசனில் புதுச்சேரி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை ஒரு நல்வாய்ப்பாகக் கருதுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/04/5c2f85bc71d71e2fd6735b433375a7b21785852191570194_original.jpg" width="220"/></item></channel></rss>